ஜெயமோகன் (நித்ய சைதன்ய யதி நினைவு)
உண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.
காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. அவரது உடலை கூறுபோடும் வாள் போன்றது அவ்வுண்மை. அவரது அதுநாள் வரையிலான வாழ்க்கையே ஒரு பெரிய பிழை என்று சொல்லக்கூடியது அவ்வுண்மை. அவர் தன் மொத்த வாழ்க்கையை தன் படைப்புகளை மொத்தமாக நிராகரிக்கவேண்டியிருக்கும். அவ்வேதனையை அவர் அஞ்சினார். அவ்வெறுமையை அவர் தவிர்க்க முயன்றார்.
ஜெயமோகன் (பேராசிரியர் ஜேசுதாசன் நினைவு)
சான்றோர் (திறனாய்வாளர்கள்) நான்கு அம்சங்களைக் கொண்டவராக இருப்பார்.
- கல்வி
- அழகியல் உணர்வு
- அறச்சார்பு
- நயத்தக்க நாகரீகம்.
பாவண்ணன் (உயிர்க்கோடுகள் . கே.எம்.ஆதிமூலம், கி.ராஜநாராயணன். தொகுப்பு: புதுவை இளவேனில். அகரம் பதிப்பகம்)
மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத அரசு நிர்வாகம் அந்தச் சோர்வின் பின்னணியில் உள்ளது. மக்களுக்காக உழைப்பதற்காக உருவாகும் (அரசு) நிர்வாகம் தன் வளர்ச்சிப்போக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தெரியாத அகங்காரம் நிறைந்த உறுப்பாக மாறிவிடுகிறது. அது வழங்கும் கசப்புகளை விழுங்கும் (விவசாயியின்) முகத்தில் சோர்வைத் தவிர வேறு எதைப் பார்க்கமுடியும்?