குறிச்சொல் தொகுப்புகள்: Poems

மேற்கோள்

Goodbye – Dandelion

மகள் எழுதிய கவிதை

They are all born
They all have to grow up
and when their time comes,
they are sold to the devil.

They get gulped down,
at an instant.
At this very moment,
they feel like water
splitting up from their families
when going down a waterfall.

Frightened,
they travel through the human body,
Like an asteroid,
flying through space.
First through the stomach,
then the intestines.

They shiner miserably.
They are bubbles,
separating from their families
when blown.
They are dandelions,
getting blown to a land
far, far away.

Soon enough,
they all have their time
when they sadly say
‘Goodbye’

ஆடிஸி: Odyssey: ஓர் அறிமுகம்

ஆடிசியை ஏன் கிளாசிக் என்கிறோம்? சிறிய அறிமுகம் + பார்வை + விமர்சனம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற மாதிரி ஆடிசி அமைந்திருக்கிறது. ’சிவாஜி’யில் ரோபோ ரஜினி செய்கிற சாகசம் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு ஓடிசி பிடிக்கும்.

இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை. சொந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவனை, விநோதமான மிருகங்களும் வித்தியாசமான (மாற்றுத் திறனாளி?) மனிதர்களும் தடுத்து, படுத்துகிறார்கள்.

புருஷனாக சண்டைக்குப் போயாகி விட்டது. கணவனாகத் திரும்ப விரும்புகிறான். மகனுக்கு தந்தையாக வாழ, இல்லம் சேரப் போகிறான்.

வலைப்பதிவில் கூட நினைவலைகள் புகழ் பெற்றது. ஆட்டோகிராப் படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடல் போல் பழையதை அசை போடுவதன் சுகத்தை ஆடிசி சொல்கிறது.

மகாபாரதம் போல் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம். தூக்கம் வராத இரவுகளில் குழந்தைகளுக்கு வாசிக்கலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல் நடுநடுவில் இருந்து வாசிக்கலாம்.

’ஆடிசி’ சொல் ஆங்கிலத்தில் அன்றாட வாழ்வில் பயன்படும் வார்த்தை.

“ஆமெரிக்காவிற்கு எப்படி வந்தீங்க?”

“அது ஒரு ஆடிஸி!”

“வலைப்பதிவில் தமிழ் உண்டா?”

“இப்படிக் கேட்டுட்டீங்களே… தமிழ்ப்பதிவுகள் மிகப் பெரிய ஆடிசி மேற்கொண்டுள்ளது.”

இங்கே இராமாயணமு மகாபாரதமும். கிரேக்கத்தில் ஹோமருக்கு இலியாட் & ஆடிஸி. இரு கதைகளும் பின்னிப் பிணைந்தவை. டுரோஜன் போரை இலியாட் சொல்கிறது. சண்டை முடிந்தவுடன் ஓடிஸி தொடங்குகிறது.

இலங்கைக்கு செல்லும் அனுமான் போல் வழியெங்கும் பிரச்சினைகள்:

  • கடுமையான புயல் காற்று
  • சிதறிக் கிடக்கும் பாறைகள் கை கோர்த்து படகை அழிக்க நினைப்பது
  • சுழிப் போட்டு பாதையை சுழல வைக்கும் கடல்
  • மனிதர்களைப் பன்றியாக மாற்றும் அழகி
  • பாடலில் மயங்க வைக்கும் பாடகி
  • தாமரையை உண்ணும் (பாரதீய ஜனதா?) போதைப் பிரியர்கள்

ஹீரோ இப்படி இடாகா (சொந்த) ஊர் வர கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, இடாகா-வில் மனைவியையும் அவனுடைய நிலத்தையும் அபகரிக்க அண்டை வீட்டார் விழைகிறார்கள். “உன் கணவன் செத்துப் போய்ட்டான். என்னக் கட்டிக்க” என்னும் மிராசுதாரர்களிடமிருந்து, தன் அம்மாவை, மகன் காப்பாற்றி வருவது இன்னொரு இழை.

மனைவி பெனலொப்பி இருபதாண்டுகளாக கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கிறாள். போருக்கு பத்தாண்டுகள். ஊர் திரும்ப இன்னொரு பத்தாண்டுகள். ஓடீஸஸ் உயிரோடு இருக்கின்றானா என்பது கூட அறியாத பயம் கலந்த சோகம் கொண்டவள் பெனொலப்பீ.

இருபதாண்டுகள் கழித்து வரும் ஆடவனை, எப்படி தன்னுடைய கணவன் என்று பெனலொப்பி கண்டுபிடிக்கிறாள்? குடும்பப் பாடல் கிடையாது. மரபணு சோதனை இல்லை. ‘தாலி கட்டியவனைத் தெரியாதா?’ என்னும் லாஜிக் சறுக்கல் லேது. எப்படி? நீங்களேப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க.

ஓடீசஸ்

ஒடீஸசிடம் எந்த அற்புத சக்தியும் கிடையாது. பத்து பேர குத்த மாட்டான். ஒரே சமயத்தில் இருபது பேரோடு சிலம்பம் ஆட மாட்டான். பறக்க மாட்டான். குண்டுகளைக் கையால் தடுக்க மாட்டான். ஆனால், புத்திசாலி. மகா புத்திசாலி. சூட்சும புத்தி கொண்டவன். தன் அறிவைக் குறித்து பெருமிதம் கொண்டவன். கடுமையான விசுவாசம் கொண்டவன். நாட்டிற்கும் வீட்டிற்கும் நாய் போன்ற நன்றி உடையவன். இவன் என் ஹீரோ.

டேவிடும் கொலியாத்தும் கதைக்கு முன்னோடியாக சைக்ளோப்ஸ். கொஞ்சம் ராமனின் வாலி. நிறைய கும்பகர்ணன். அப்படியே துணைக்கு சிந்துபாத்தின் பூத பிசாசுகளையும் சேர்த்தால், நமக்கு பாலிஃபீமஸ் கிடைக்கிறார். இன்றைய பிரகாஷ்ராஜ் வில்லன்களின் கொள்ளுத் தாத்தா.

சைக்ளாப்சுக்கு நாகரிகம் தெரியவில்லை. பழங்குடி எனலாம். இவனின் தந்தை பாஸீடான். பாஸிடானுக்கு கோபம் வருகிறது. தன் மகனை, சைக்ளாப்சைக் கொலை செய்த ஓடீசஸ் மேல் கோபம் வருகிறது. பாஸீடான் கடல்களின் அரசன். வாயு பகவான். வருண தெய்வம். புயல் சின்னம் ஏற்றுகிறான்.

அம்மா செண்டிமெண்ட்டும் ஓடிசியில் உண்டு. “உன் விதியை அறியும் ஆசை, என் அன்பின் உத்வேகம் – இவைதான் இறந்திருக்கின்றன்” என்கிறாள். பாதாள லோகம், கனவு உலகம் எல்லாம் வருகிறது.

ஹோமர்

இவ்வளவு கிளைக் கதைகள், இத்தனை கதாபாத்திரங்கள் – அத்தனையும் ஒருவரா எழுதியிருக்கிறார்? வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது போல், கம்பரின், வால்மீகியின், துளசிதாசரின் இராமாயணம் போல் ஹோமரின் இலியாடும் ஒடிசியும் ஒற்றை ஆள் எழுதியது அல்ல. காலங்காலமாக வாய்மொழியாக வந்த பாடல்களின் தொகுப்பு. நாட்டிற்கேற்ப, பாஷைக்கேற்ப, பண்பாட்டிற்கேற்ப மாற்றங்கண்ட தொகுப்பு.

ராப்சோட்ஸ் எனப்படும் (ராப்சடி.காம் இங்கிருந்துதான் வந்தது :-) ஏதன்ஸ் நாடகக் கலைஞர்களால் கூத்தாக்கம் செய்யப்பட்ட கதை. போருக்குச் சென்ற அலெக்சாந்தர் கையோடு எடுத்து வந்திருக்கிறார். பைபிளுக்கு அடுத்தபடியாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒடிசியை நாடி இருக்கிறார். லாரென்ஸ் ஆஃப் அரேபியா மேற்கோள் காட்டுகிறார்.

இலக்கியம்

ஒடிசியின் காட்சிகள் ஓவியத்தில் இடம்பிடித்திருக்கிறது. டாண்டே போன்றவர்களிடம் கதாபாத்திரமாக உலா வருகிறது. டென்னிசனின் கவிதையில் தோன்றுகிறது. ஜாகுலின் கென்னடி ஒனாசிஸ் தகனத்தில் அஞ்சலிப் பாடலாக ஒலிக்கிறது. பெனலப்பியை மையமாக வைத்து மார்கரெட் ஆட்வுட் நாவல் எழுதுகிறார். ஜேம்ஸ் ஜாய்சும் ‘யூலிசிஸ்’ (ஓடீசஸுக்கு இத்தாலியப் பேர்) கொடுக்கிறார். டெரக் வால்காட்டின் ஓமராஸ் கவிதை; ஃபிரான்ஸ் காஃப்கா… ஸ்டீவன் ஸ்பீல்பெகின் ஈ.டி… பட்டியல் நீளம்.

போரில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மனித மாண்புகள் இருக்குமா? உயிரைக் கொன்று குவித்த இராணுவ வீரர், சமூகத்தின் ஒழுங்கற்ற கட்டமைப்பில் இயங்க இயலுமா? எதிரி எங்கே இருப்பார் என்றறியாத வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் யுத்தகளத்தில் பணியாற்றியவரால், சகஜநிலைக்கு மீள முடியுமா? யாரை நம்புவது? இயல்பாக உறக்கம் கூட வராத கொலைக்களம் போல் இல்லமும் ஆகிப் போவதை ஓடிஸஸ் மூலமாக உணரலாம்.

‘யார் இவர்’ என்று அறிந்து கொள்வதன் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் புத்தகத்தை காவியம் என்று அழைக்கும் தகுதியும் அதிகரிக்கிறது. ஆடிசி மனிதத்தை சொல்கிறது. ஆடிசி யார் என்று இன்னும் இன்றும் தேடுகிறோம்.

Untitled – Dandelion

The wind blows as hard as it ever can,
Making the trees whoosh side to side.
While a superstar is waiting for her fans,
A beggar is trying to hold his pride.
The birds keep chirping,
As the day keeps moving.

மகளின் கவிதை

பாட்டாவின் நதி – ஜெயமோகன்

ஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

வெளியான இதழ்: மே, 1987

இந்த வழியாகத்தான்
எங்கள் பழைய நதி ஓடியதாம்
முன்பு
ரொம்ப காலத்துக்கு முன்பு.

பெரிய நதி அது.
எங்கள் தாத்தா அதில்தான்
குளிப்பாராம்
அவரோடு பெரிய யானையும்.

அப்புறம் எப்படியோ
நதி நின்று போச்சாம்.
அந்த இடமெல்லாம் மணலாச்சு.
மணல் மேலே
எங்கப்பா வீடுகட்டிக் குடிவந்தார்.
இப்பக்கூட
எங்க கொல்லைப்புறத்தைத்
தோண்டி பார்த்தால்
மீன் முட்கள்
கிடைக்கின்றன.

எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்தான்
நாங்கள்
சனிக்கிழமைதோறும்
குளிக்கறதில்லை.

கந்தசாமி: பாடல்

Related Song Lyrics from Kandhasamy: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

மியாவ் மியாவ் பூனை
அட…
மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே
திம்சுக்கட்ட மீனை?

Araleya-Cats-Dogs-Lick-Flickr-Images-Cleanமில்க்கை தேடும் பூனை
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை!

1. நம் இதயம் ஒண்ணு
2. நம் உடல்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

1. உன் பார்வை ஒண்ணு
2. அதில் அர்த்தம் இரண்டு
3. அது சொல்லத் தூண்டும் வார்த்தை மூணு

~oOo~

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு நான் புதுசு

மோதலுக்கு நான் பழசு
காதலுக்கு நான் புதுசு

1. நம் மெத்தை ஒண்ணு
2. அதில் தூக்கம் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

1. உன் இடுப்பு ஒண்ணு
2. அதில் உடுப்பு ரெண்டு
3. அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு

~oOo~

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு

ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

1. நம் முத்தம் ஒண்ணு
2. அதில் எச்சில் ரெண்டு
3. அந்த போதையில் மறக்கும் காலம் மூன்று

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் தேனீ ரெண்டு
3. கொட்டும் நானே ஹனி மூணு


இந்தப் பாட்டை மாற. உல்டாப்பா குழந்தைகளுக்கு பாடினால்:

vivetmart_Flickr-Yokviv_Photos-Cats-Dogs-Bulldogலொள் லொள் நாய்
அட…
லொடக்கு இல்லா நாய்
காவல் காக்க நிக்கறியே
காலங்கார்த்தால டோய்

எலும்பைத் தேடும் நாய்
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
ஓநாய் மேல பொய்!

1. நம் மூக்கு ஒண்ணு
2. நம் மோப்பம்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா பிடிப்போம் தாணு

1. உன் முகரை ஒண்ணு
2. அதில் கண்ணு இரண்டு
3. அது கவனிக்காட்டா ஆகும் காலு மூணு

~oOo~

திட்டலுக்கு நான் பழசு
இலக்கியத்துக்கு நான் புதுசு

பொட்டைக்கு நான் பழசு
கொட்டைக்கு நான் புதுசு

1. நம் வண்ணம் ஒண்ணு
2. அதில் காந்தல் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் முகப்பூச்சு மூனு

1. உன் வாலு ஒண்ணு
2. அதில் கருத்து ரெண்டு
3. அதில் பேப்பர் போட்டா அர்த்தம் ஆகும் மூன்று

~oOo~

ரேபிஸுக்கு லீவு கொடு
ரேப்பிஸ்ட்டுக்கு நோவு கொடு

போகரை தூர விடு
சேகரோடு சேர விடு

1. நான் வளர்ப்பது ஒண்ணு
2. அதில் லாபம் ரெண்டு
3. பசிச்சா வாய்க்குள் பறந்துபோகும் காணு

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் சேஷ்டை ரெண்டு
3. கொட்டும் பேஷ்டை மூணு

~oOo~

பிரபாகரன்: 1954-2009

நன்றி :: சத்தியக் கடதாசி » Napoleon

பிள்ளைகாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போது பிறந்தான்
என்று கேட்கிறார் ஆசிரியர்
ஆயிரம் ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
நூறு ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
சென்ற ஆண்டு என்றனர் பிள்ளைகள்
எவருமே அறியார்

பிள்ளைகாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ன செய்தான்
என்று கேட்கிறார் ஆசிரியர்
ஒரு போரை வென்றான் என்றனர் பிள்ளைகள்
ஒரு போரைத் தோற்றான் என்றனர் பிள்ளைகள்
எவருமே அறியார்

எங்கள் கசாப்புக் கடைக்காரனிடம்
பிரபாகரன் என்றொரு நாய் இருந்தது
கசாப்புக் கடைக்காரர் அதை அடிப்பார்
ஒரு ஆண்டு முன்னர் அது பட்டினியாற் செத்தது
என்றான் சதீஷ்

இப்போது எல்லாப் பிள்ளைகளும்
பிரபாகரனுக்காக வருந்துகின்றனர்.

மிரோஸ்லாவ் ஹொலுப்
மூன்றாங்கையாகத் தமிழில் தழுவல்: சுகன்
(கறுப்பு:2002)
Velupillai-Prabhakaran-LTTE-Tamil-Tigers


Napoleon by Miroslav Holub

Children, when was
Napoleon Bonaparte born,
asks the teacher.

Thousand years ago, the children say.
Hundred years ago, the children say.
Last year, the children say.
Nobody knows.

Children, what did
Napoleon Bonaparte do,
asks the teacher.

He won a battle, the children say.
He lost a battle, the children say.
Nobody knows.

At us the butcher had a dog
František says,
he was called Napoleon.

The butcher used to beat him, and the dog died
of hunger
last year.

And now all the children feel sorry
for Napoleon.
(1960)

வணக்கம் – அனலேந்தி

இட்லி கிடைக்கும் என்றால்
இருபது வரியில் கவிதை…
கிட்னிபீஸ் கறியென்றால்
கால்பக்கம் சின்னக்கதை…

சிக்கன், மட்டன் பிரியாணியா?
சிக்கிவிடும் சிறுகதை…
சொக்க வைக்கும் விருந்தா?
நிற்க வைப்பேன் காவியம்…

நூறு ரூபாய் நோட்டுக்கு
ஆறுவகைப் பாட்டுண்டு…
ஊறுகாயும் குவார்ட்டருமென்றால்
ஊடுகட்டி அடிப்பேன் இலக்கியம்…

பெட்டி நிறைய ‘கட்டா’?
தொட்டு விடுவேன் எழுத்துச் சிகரம்!
சட்டென்று சொல்லி விடுங்கள்
சரக்கு எது வேண்டுமென்று!

எட்டுத்திக்கும் எகிறிவரும்
என்னறிவுப் பெட்டகத்தை
துட்டுகுவித்து வாய்கவரும்
தரகர்களுக்கு என்வணக்கம்.

பதவிசான குளிர்காரில்
பவனிவரும் பிரமுகருக்கு
தொட்டுவிடும் கால்வணக்கம்!

வெளியான இதழ்: கல்வெட்டு பேசுகிறது
அக்டோபர் – 2008
ஆசிரியர்: சொர்ணபாரதி

சாரு நிவேதிதா மடலில் தந்த கவிதை

படம்: நான் எழுத்தாளன்
பாடல் / பாடியவர்: சாரு நிவேதிதா

வலைப்பதிவு எழுத வந்தேன்
வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

யாம் ஒரு வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

கப்ஸா என்னும் நமீதாவின் சதை கிசுகிசு
செக்சும் அடங்கிய சினிமா சான்ஸ் எனும்
வலைப்பதிவு எழுத வந்தேன் வாசகனே என் வாசகனே

ஜெமோவும் எஸ்ராவும் எழுதாததா
இல்லை கமலினை இராமு சூழ்ந்ததா
புதுமைப்பித்தனை நான் அறியாததா
சின்னத்திரை சீரியலின் வாய்ப்பை தேடிட
வலைப்பதிவு எழுத வந்தேன்
வாசகனே என் வாசகனே

அத்தனை படமும் பர்மாபஜாரில்
நான் பதிவுக்கு பார்ப்பது எவ்விடத்தில்
வெறும் IMDB உள்ளது என்னிடத்தில்
அதன் Torrent அது உன்னிடத்தில்

ஒருமுறையா இருமுறையா
பலமுறை பல இட்டுக்கட்ட வைத்தாய்
இராப்பிச்சையா பகல்பிச்சையா
கணம்கணம் தினம் எனை கேட்க வைத்தாய்

திரைக்கு அலைந்திடும்
திரைபோட்ட வாழ்க்கையும் துரத்துதே
உன் பொருள் பொருள் பொருள் என்று
பொருமுகின்ற மனம் இன்று பிதற்றுதே

ஐசிஐசிஐ வங்கியால் நோக்குவாய்
தவணை அட்டையால் தாங்குவாய்
இயக்குநர் திரைக்கரம் எனை அரவணைத்து உன் பொருள் பெற

(வலைப்பதிவு எழுத வந்தேன்)

ஆறிலிருந்து அறுபது வரையில் பூக்கள்.. பூக்கள்! – வைகைச்செல்வி

ஆறு வயதிற்கு
பிச்சிக் கொடி உயரம்தான்

பதினாறு வயதில்
செம்பருத்தி மட்டுமே
பள்ளிக்குள் ஆடின

இருபத்தாறு வயதில்
உன் தோட்டம் எதிரில்தான்
ஆனால் -
வேலிப்படல் தாண்ட
யாருக்குத் துணிவுண்டு?

பந்தக்கால் போட்ட பின்பு
தினந்தோறும்
கதம்பமும் கனகாம்பரமும்
திரும்பிப் பார்ப்பதற்குள் -
முப்பதும்… நாற்பதும்
அறுபதுமாய் வருடங்கள்
வாசமின்றி உதிர்ந்தன

இன்று -
ஊரெங்கும் திருவிழா.
எங்கிருந்தோ வருகிறாய்
கையில் பூச்சரத்துடன்
கறுப்புத் தேருக்கே
வண்ணப் பூச்சூட்டல்கள்.
என்
வெள்ளிப் பூந்தலையில்
மல்லிகைக்கு ஏது நிறம்?

நன்றி: தினமணி தீபாவளி மலர் 2004

சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

பாலிண்ட்ரோம் (Palindrome) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இடம்வலம் வலம் இடமாகப் படித்தால் மாறாத வார்த்தைகள் வாக்கியங்கள்.

தமிழில்

  • மோருபோருமோ
  • தேருவருதே
  • விகடகவி

இவை மூன்றைத் தவிர வேறு உதாரணங்களை நான் பார்த்ததில்லை.

ஆங்கிலத்தில் இவைகளை அமைப்பது சுலபம். New American Writing பத்திரிகையில் ஒரு கவிதை வரிகள் அனைத்தும் ‘பேலின்ட்ரோம்’ வடிவத்தில் இருந்தன. உதாரண வரி:

But no repaid diaper on tub!

தமிழில் இவ்வாறு நீண்ட சொற்றொடர்கள் அமைப்பது எழுத்தாளனாகிய எனக்கு சவாலாக, ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

  1. வா தாத்தா வா!
  2. மாவடு போடுவமா?
  3. மாலா போலாமா?
  4. யானை பூனையா?
  5. யானையா பூ யானையா?
  6. போ வாருவா போ.

கொஞ்சம் சந்திப்பிழைகளை அனுமதித்தால்:

  1. மாமர சில சிரமமா?

முழுசாக அர்த்தம் வேண்டும் என்று கட்டாயமில்லாவிட்டால் மிக நீண்ட வாக்கியங்கள் அமைக்க இயலும்

  1. ஓர் பாயை தின வானதியை பார் ஓ!
  2. துவள் கொடி மரவுரி பரிவிர மடிகொள்வது!

வாசகர்கள் முயற்சி பண்ணி எனக்கு எழுதினால் இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன்

- மே 1990

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு)

The following poem, which Lydia presented in class, was based on an assignment to create your own form. Maxine Chernoff and I (Paul Hoover's Poetry Blog: Lydia Tomkiw) published it in one of the first issues of New American Writing, and it was also included in the first edition of The Best American Poetry [1988], ed. David Lehman and John Ashbery. The poem consists entirely of palindromes, some of which she must have created to suit the poem, for instance the next to last line:

Six of Ox Is

O, no iron, o Rio, no
red rum murder;
in moon: no omni
devil-lived
derision; no I sired
Otto,
a
drab bard,
Bob,
but no repaid diaper on tub.
O grab me, ala embargo
emit time,
Re-Wop me, empower
Eros’ Sore
sinus and DNA sun is
fine, drags as garden if
sad as samara, ruff of fur, a ram; as sad as
Warsaw was raw.