தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”
பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.
பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.
மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.
இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.
அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல வேளை.
‘கமல்ஹாசன் - ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.
அப்படி ஒரு கொடூரம் இங்கே: The Hindu : Front Page : Soothsayers arrested for poisoning children after predicting their death
அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:
மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்
1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் - யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”
2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.
புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.
இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”
ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவோம்.
வினாக்கள்
- செக்ஸ் அஃபென்டர் என்றால் யார்?
- இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
- அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
- மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
- அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?
பாலியல் குற்றவாளி – Sex Offender
- சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
- அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
- குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
- சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
- மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
- ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.
மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்
அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.
ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்க என்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.
‘மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.
‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.
தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்
பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.
1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.
2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.
3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”

உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?
1. National Sex Offender Registry
2. Obtaining Information About Sex Offenders
தொடர்புள்ள பதிவுகள்:
2. Jaycee Lee Dugard kidnap | World news | guardian.co.uk
3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”
4. Is Jaycee Dugard’s tormentor mentally ill? – Broadsheet – Salon.com
5. Afghan law: Wife refusing sex? Deny her food – Broadsheet – Salon.com
7. In True Psycho Fashion, Phillip Garrido Had Blog, Heard God – Phillip Garrido – Gawker
8. Authorities Missed Chances to Find Captives – WSJ.com
9. Woman Held Captive for 18 Years Resurfaces – WSJ.com
லிபரல் பக்கம்: இன்னொரு பக்க நியாயம்: மாற்று சிந்தனை
10. Erogenous Zoned: Sending sex offenders into exile – Reason Magazine
11. Hit List: Deadly sex offender registries – Reason Magazine
12. Which pedophiles strike again? – By Daniel Engber – Slate Magazine
கட்டுரையை முடிக்க பன்ச் டயலாக்கள்
- கஞ்சா வைத்திருந்தால் கஞ்சமில்லாமல் இருபது வருசம் உள்ளே தள்ளூறாங்க! பொட்டச்சிய வச்சிருந்தா மட்டும் ஏன் பொட்டில் அறைஞ்சு பாடை கட்ட மாட்டேங்கிறாங்க?
- பொண்ணுங்க மனச பொண்ணுக்குத்தான் தெரியும் என்பது சீரியல் வசனம். ரேப்பும் செய்வாள் பத்தினி என்பது ரியல் விசனம்.
- சந்தேகாஸ்தபமா இருக்கேன்னு போலீஸ் விசாரிச்சா தப்பே கிடையாது. ஒண்ணு ஒபாமாவோட பீர் கிடைக்கும்; இல்லேன்னா, பொண்ண பதுக்கற பொறுக்கி கிடைப்பாங்க.
- பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
- கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
- அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!


















18 பதில்கள் இது வரை ↓
ila // ஆகஸ்ட் 30, 2009 இல் 6:25 பிற்பகல் |
Great, Amazing, superb, tremendous- collection.
SnapJudge // செப்டம்பர் 21, 2009 இல் 9:00 பிற்பகல்
இளா, __/\__
iamnotgod // ஆகஸ்ட் 31, 2009 இல் 1:23 மு.பகல் |
Why dont you convert this into a coherent essay with references. That may take time still it is worth the time.
SnapJudge // செப்டம்பர் 21, 2009 இல் 9:01 பிற்பகல்
ஐ எம் நாட் காட்,
சீர் செய்து, கோர்வையாக்குகிறேன்…
ஓவியன் // ஆகஸ்ட் 31, 2009 இல் 1:49 பிற்பகல் |
சாரு நிவேதாவும், ஜெயமோகனும் ஒரு விஷயத்தை பற்றி நேரெதிர் துருவங்களில் இருந்து பேசுகிறார்கள். விஷயம் மையத்தில் இருக்கிறது
SnapJudge // செப்டம்பர் 21, 2009 இல் 9:02 பிற்பகல்
ஓவியன்,
சாருவின் மந்திரத்தில் மாங்காய் விழும் மாயம் மிக மிக ஆபத்தானது.
தன்னம்பிக்கை வேறு… மூட நம்பிக்கை வேறு.
சித்ரன் // ஆகஸ்ட் 31, 2009 இல் 5:49 பிற்பகல் |
Extensive! Hard work! Great article.
ஆனால் தலைப்பை மாற்றியிருக்கலாமே என்று தோன்றியது. இன்னொரு முறை நிதானமாகப் படிக்கவேண்டும்.
SnapJudge // செப்டம்பர் 21, 2009 இல் 9:11 பிற்பகல்
சித்ரன், __/\__
—தலைப்பை மாற்றியிருக்கலாமே —
உண்மை. உள்ளே வந்து குழந்தையுடன் குலாவச் சொல்லும் அதிர்ச்சியைத் திணிப்பதே தலைப்பின் நோக்கம்
SnapJudge // செப்டம்பர் 2, 2009 இல் 6:38 பிற்பகல் |
கடவுளைக் கண்டேன் – வரம் தரும் கல்பதரு
Padma arvind // செப்டம்பர் 3, 2009 இல் 10:20 பிற்பகல் |
//ரேப்பும் செய்வாள் பத்தினி என்பது ரியல் விசனம்.
// இது மேலோட்டமான வரி. மனைவியும் ஒரு விக்டிம் ஆக இருக்க கூடும். domestic violence ஒரு சிக்கலான உளவியல். இங்கே பல படிமங்கள் உண்டு. இதன் ஆழம புரியாமல் எதுவும் சொல்ல இயலாது. பாதிக்கப்பட்ட பெண்ணே கூட போன், கம்ப்யூட்டர் அணுக முடிந்தும் புகாரிடாதது ஏன் என்பதும் தெரியாது. ஸ்டாக்ஹோம் சிந்த்ரோம் தவிர உயிர்பயம், அனுபவித்த சித்திரவதைகள் எதுவும் தெரியாது. சில் பெண்கள் பாதிக்கப்பட்ட ஆண்கள் பல வருடங்களானாலும் வெளி வர துணிவதில்லை.
SnapJudge // செப்டம்பர் 21, 2009 இல் 9:13 பிற்பகல்
பத்மா, __/\__
—மேலோட்டமான வரி.—
பேரே snap நீதிதானே… விலாவாரியாக விசாரித்து நீதி வழங்க, நீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திருப்போம்.
—சில் பெண்கள் பாதிக்கப்பட்ட ஆண்கள் பல வருடங்களானாலும் வெளி வர துணிவதில்லை.—
இந்தியத் திருமணங்கள் குறித்து சொன்ன மாதிரி நச்சென்று உள்ளது!
அருணகிரி // செப்டம்பர் 20, 2009 இல் 4:56 பிற்பகல் |
வள்ளி மணவயதில் இருந்தவள்; முருகனைக் கணவனாக வரித்தவள், அவளை பயமுறுத்தி பின் சுய உருவம் காட்டியது காதலன் காதலியிடத்தில் நிகழ்த்தும் ஒரு சிறு கண்கட்டு விளையாட்டு. அதற்குப் பின் மன்னரான அவளது தந்தையின் சம்மதத்துடன் வள்ளியை மணம் செய்கிறார் முருகன். இதில் எங்கே பலாத்காரம் வந்தது, ஏன் அபத்தமாக எழுதியிருகிறீர்கள்?
அடுத்த வரியில் ஜீஸஸ், அல்லா என்று எழுதியதற்காக இப்படி ஒரு சூடோ-செக்யுலர் நிரவலா?
SnapJudge // செப்டம்பர் 21, 2009 இல் 9:28 பிற்பகல்
அருணகிரி, __/\__
—வள்ளி மணவயதில் இருந்தவள்;—
டேவிட் லெட்டர்மேன்/லாரி கிங் போன்ற பணக்கார ‘வயகரா’ இளவரசர்கள் மணமுடிப்பது போல் வள்ளியும் வாழ்க்கைப்பட்டாள். லாரி கிங்குக்கு 67 வயதிலும் இளமையாக குழந்தை பிறக்கிறது. முருகரும் வயோதிகத் தோற்றத்தில் வந்து, பின் உருமாறிய கதையும் இதே குறியீடு கொண்டதே.
அதெல்லாம் debatable…
என்னவாக இருந்தாலும் இரண்டாந்தாரம். ஏற்கனவே, கல்யாணமான ஒருவருக்கு கீப்.
உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவளை ‘சீனி கம்’ அமிதாப் ஆகிருதியோடு மாப்பிள்ளையாக்கிக் கொள்ள மனசு இடங்கொடுக்குமா…
அருணகிரி // செப்டம்பர் 22, 2009 இல் 8:05 பிற்பகல் |
”டேவிட் லெட்டர்மேன்/லாரி கிங் போன்ற பணக்கார ‘வயகரா’ இளவரசர்கள் மணமுடிப்பது போல் வள்ளியும் வாழ்க்கைப்பட்டாள்”.
என்ன சொல்கிறீர்கள்? கிழ வேடத்தில் வள்ளி திருமணம் நடக்கவில்லை. அதை வள்ளியின் தந்தையும் அனுமதித்திருக்க மாட்டான். வேடம் கலைத்து சுய உருவம் காட்டிய பின்தான் திருமணம் நடக்கிறது. வள்ளி மணம் முடிப்பது இள முருகனை.
காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமன் தன் காதலியைக் கலாய்ப்பதுபோல் கலாய்த்து விட்டு, பின் வேஷம் கலைத்து சுய உருவம் காட்டி காதலியை மகிழ்வடையச் செய்து இணைதல் போல இது ஒரு விளையாட்டு.
இதை எப்படி (மன்னிக்கவும்) கேனத்தனமாக டேவிட் லெட்டர்மேன் என்ற நிஜக்கிழவன் ஒரு சிறுவயதுப் பெண்ணை மணப்பதுடன் ஒப்பிடுகிறீர்கள்?
”லாரி கிங்குக்கு 67 வயதிலும் இளமையாக குழந்தை பிறக்கிறது. முருகரும் வயோதிகத் தோற்றத்தில் வந்து, பின் உருமாறிய கதையும் இதே குறியீடு கொண்டதே”.
இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாக இருக்கிறதே! லாரி கிங் என்ற கிழவனுக்கு ”இளமையாக குழந்தை பிறப்பதற்கும்” (குழந்தை எப்போதுமே இளமையாகத் தானே அய்யா பிறக்கும்!!!:))), நிஜக் கிழவன் சிறு குமரியை மணப்பதற்கும் என்னய்யா சம்பந்தம்?!
மேலோட்ட தர்க்கத்தில்கூட இந்த ஒப்பீடு பொருந்தி வரவில்லையே. கொஞ்சம் யோசித்து எழுதுங்கள் பா.பா.
ஓகை நடராஜன் // செப்டம்பர் 24, 2009 இல் 6:26 பிற்பகல் |
//தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும்.//
முருகன் கிழவராக வந்தது மாறுவேடம் என்பது வள்ளித்திருமணம் கதை அறிந்த அனைவரும் உணர்ந்த ஒன்றாயிறே இதில் வள்ளி காதலித்துக் கொண்டிருக்கிற முருகன்தானே அவரைக் கைபிடிக்கிறார். காதலர் விளையாட்டை கற்பழிப்பு என்று சொல்வது ஏன்?
சில ஆண்டுகள் முன்புவரையிலும் கூட பலதார மணம் நம்நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே!
மிகவும் நாகரிகமற்ற உண்மைக்குப் புறம்பான எழுத்தாடல்.
ஓகை நடராஜன்.
SnapJudge // செப்டம்பர் 24, 2009 இல் 6:50 பிற்பகல்
ஓகை, __/\__
—சில ஆண்டுகள் முன்புவரையிலும் கூட பலதார மணம் நம்நாட்டில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே! —
அமெரிக்காவில் கூட சில ஆண்டுகள் முன்பு வரை பெண்களுக்கான ஓட்டுரிமை மறுக்கப்பட்டது. அப்போது சரியென்று நினைத்ததால், இன்றும் கொண்டாட வேண்டாமே!?
— மிகவும் நாகரிகமற்ற உண்மைக்குப் புறம்பான எழுத்தாடல்—
குறிப்பிடப்பட்ட முதியவர் தீவிர இறை நம்பிக்கை கொண்டவர். குழந்தைகளைத் திருடுபவர்.
இந்தக் கட்டுரையின் நோக்கம் சிறுமிகளைக் கவர்ந்து வன்புணரும் வயோதிகர் குறித்து… அதை விட்டுட்டு… ஒரு வாக்கியத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாமே?
அருணகிரி // செப்டம்பர் 26, 2009 இல் 4:32 பிற்பகல் |
அதுதானே பாபா கேள்வியே, சிறுமிகளை வன்புணரும் கிறித்துவ அடிப்படைவாத அமெரிக்க இழி வயோதிகன் ஒருவனைப்பற்றிய கட்டுரையில் இந்துக்கடவுள் முருகனை அபத்தமாக இழுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? இது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியும் கூட.
குறிப்பிட்ட முதியவர் தீவிர (கிறித்துவ) இறை நம்பிக்கை கொண்டவர் என்று கூறியிருக்கிறீர்கள். அந்நம்பிக்கையின் பின்னணியில் (உதாரணமாக விவிலிய அடிப்படையில்) அல்லது அவரே தன் மதநம்பிக்கையினால் இதைச்செய்ததாக சொல்லியிருந்தாலோ அதனைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும்.
ஏனெனில் இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன.
உதாரணத்திற்கு, ஞானஸ்நானத்திற்கு முன் புனித ஆவி இறங்காத குழந்தைகள் முழுமையற்ற பிறவிகள் என்று சொல்லி அவர்களை molest செய்த சம்பவங்கள் இதற்கு முன் உண்டு. அதைச் சொல்லலாம். குழந்தைகளைக் கழியால் அடிப்பதை விவிலியத்தை வைத்து நியாயப்படுத்தும் கிறித்துவ மதப்பற்றாளர்கள் இருக்கிறார்கள். தடியால் குழந்தையின் பின்பக்கத்தில் அடிப்பதை ”கடவுளின் வழி” என்று சொல்லித்தரும் கிறித்துவ மினிஸ்டர்களும் (குறிப்பாக evangelical/ baptist) இருக்கிறார்கள். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை அடிக்க எந்த அளவு நீளக்கழி உபயோகப்படுத்த வேண்டும் எவ்வளவு அடி அடிக்க வேண்டும் என்றெல்லாம் புத்தகம் போட்டிருக்கிறார்கள் (10-12 inch long; 1/8 inch diameter; 10-12 அடி அடிக்க வேண்டுமாம்- பிறகு புத்தம்புது குழந்தை உருவெடுக்குமாம். பெற்றோர்கள் அதன்பிறகு இறைவனால் ஆசி செய்யப்பட்ட அக்கழியைப் புதிய மரியாதையுடன் பார்ப்பார்களாம்). இதைச் சொல்லலாம்.
பல பொறுக்கிகளும் எந்த அடிப்படையிலாவது தன் செயலுக்கு ஞாயம் கற்பிக்கவே முனைவர்- மத நூல்களைத் துணைக்கு அழைத்தும் கூட. என்றாலும் புத்தக மதங்களின் மத நூல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. வரிக்கு வரி இறைவனால் அளிக்கப்பட்ட லிட்டரல் உண்மையே அப்புத்தக வாசகங்கள் என்ற நம்பிக்கையே அது. லிட்டரலிஸம் என்ற இந்த நம்பிக்கை அம்மதங்களுக்கு அச்சாணி போன்றது.
ஆக லிட்டரல் மதநூலின் தீவிர விசுவாசிகள் இதுபோன்ற தவறுகளுக்கு தம் மதநூல்களைக் காரணம் காட்டும்போது அதனை எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் அவ்வாறு அவர்கள் செய்ய அம்மதங்களில் இறையியல் முகாந்திரம் இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில் லிட்டரலிசத்தை நம்பும் கிறித்துவ அடிப்படைவாதிகள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் லிட்டரலிசத்தை விட்டு வெளி வரவேண்டிய கடமையும் அச்சமூகங்களுக்கும் அதன் இறைநெறியாளர்களுக்கும் இருக்கின்றன.
சமூகப்பிரச்சனைகளுக்கு எல்லா மதங்களும் ஒரே மாதிரியான தீர்வைத் தருவதில்லை. புத்தக மதங்களின் இறையியல் விளைவிக்கும் சமூகப்பிரச்சனைகளை, அவ்வாறில்லாத கீழை மதங்களுடன் நேரடியாக ஒப்பிட்டுப்பார்க்கவே முடியாது. அவ்வாறு செய்வது நம் நாட்டில் பல வருடங்களாகப் பிரசாரப்படுத்தப்பட்டுள்ள போலியானதொரு கருத்தியலையும் அதன் தொடர்ச்சியானதொரு அரசியல் சரித்தன மனோநிலையையும் பிரதிபலிக்கிறதே தவிர உண்மையை அல்ல.
ஒகை நடராஜன் // செப்டம்பர் 26, 2009 இல் 6:05 பிற்பகல் |
முருகன் கிழவராக வந்தது மாறுவேடம் என்பது வள்ளித்திருமணம் கதை அறிந்த அனைவரும் உணர்ந்த ஒன்றாயிறே இதில் வள்ளி காதலித்துக் கொண்டிருக்கிற முருகன்தானே அவரைக் கைபிடிக்கிறார். காதலர் விளையாட்டை கற்பழிப்பு என்று சொல்வது ஏன்?