Snap Judgment

தொழில்நுட்பத்தின் சூட்சுமங்களைப் பகிர்ந்த கதை

பெப்ரவரி 6, 2010 · 1 மறுமொழி

சென்ற மாதத்தின் கடைசி சனிக்கிழமை எனக்குத் தெரிந்த ஸீக்வல் நுட்பங்களை விளக்கிச் சொல்ல மேடையும் அரங்கம் நிறைந்த ஆடியன்சும் வாய்த்தனர். அவை குறித்த பவர்பாயின்டுகள் அங்கே கிடைக்கும்.

நீங்களும் இவ்வாறு உங்களுக்குத் தெரிந்த வித்தையை உள்ளூர் கேம்ப்பில் பகிர்ந்து மகிழ வேண்டும்.

ஏன்?

1. பணம் முதலீடு செய்தால் பெருகலாம். கல்வி சொல்லிக் கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு பெருகும். ஒழுங்காய்ப் புரியும்.

2. லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்கிங் தளங்களில், உங்களின் ப்ரசன்டேஷன் பேசப்பட வேண்டும். விஷயம் தெரிந்தவர் என்ற கெத்து கிடைக்கும்.

3. சொல்லிக் கொடுப்பதற்காக அமேசான் போன்ற நிறுவனங்களின் அன்பளிப்பு வரப்பெறுவோம்.

4. கோர்வையாக விளக்குவதும், சுவாரசியமாக நகைச்சுவை தெளித்துப் பேசவும், கடினமான டெக்னாலஜியை சுளுவாக எடுத்து வைக்கவும், இதை விட வசதியான இடம் கிடைக்காது.

இனி… எப்படி தயார் செய்வது?

1. உங்களுக்குத் தெரிந்து நுட்பமாக இருக்கட்டும். நீங்கள் வேலை செய்த மொழியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். லேட்டஸ்ட் என்பதை விட அகலமும், ஆழமும் அறிந்த தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுங்கள்.

2. அடுத்தது: இந்த நுட்பத்தை மற்றவர் அறிவதால் என்ன பயன்? எவருக்கு இது கவர்ச்சியாக அமையும்? யாருக்கு சொல்லித் தந்தால் முக்கியம்?

3. இனிமேல் ஈஸி. ஸ்லைடுகள் ஏற்கனவே எவராவது போட்டிருப்பார். அதை கூகிள் கொண்டு எடுக்கவும். எட்டு டெக்குகள் எடுத்து, அவற்றுள் அலசி, ஆராய்ந்து, ஒருங்கிணைத்து உங்களுடையதை தயார் செய்யவும் – ஒரு நாள் வேலை இது.

4. முக்கிய கட்டம்: டெமோ காட்டுவது. இதற்கான மென்பொருளை உங்கள் மடிக்கணினியில் நிறுவவும். சாம்பிள் நிரலிகளை பொறுத்தவும். எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று தலை முதல் வால் வரை நடத்திப் பார்க்கவும். அவற்றை எழுதி வைத்துக் கொள்ளவும் – அடுத்த நாளுக்கான வேலை.

5. கடைசி கட்டம்: பவர்பாயிண்ட்டை முழுக்க சொல்லி பார்க்கவும். ஒரு மணி நேர வகுப்பு என்றால், முக்கால் மணி நேரமாவது உங்கள் பேச்சு இருக்க வேண்டும். – எட்டு மணி நேர உழைப்பு தேவை

6. கட்டாங்கடைசி: உங்களின் பயிற்சி முழுக்க கேட்டும் பார்வையாளருக்கு எதுவும் புரியவில்லை என்றால், எதை மட்டும் முக்கியமாகக் கருதி, மனதில் இருத்த வேண்டும்? தடாலடியான முன்னேற்றம் காண்பது எப்படி? உங்களை எப்படி அணுகுவது (மின்னஞ்சல் முகவரி இன்ன பிற).

என்னுடைய டேட்டா கேம்ப் அனுபவங்கள்:

1. உள்ளூர்காரர்களுக்கு ஜோக் கொண்ட விவரிப்பு முக்கியம். இந்தியாகாரங்களுக்கு (அதாவது… காரியஸ்தர்களுக்கு) விஷயம் முக்கியம். இரண்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முயன்றேன். (எ-டு: ‘நீங்க இப்ப கத்துண்டது எல்லாமே ரத்திக்குப் போயாச்சு. எல்லாரும் க்ளௌடுக்கு மாறிட்டாங்க! இனிமே ஸீக்குவல் வெறுங்குப்பையாக்கும்.)

2. ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு மட்டுமே வைத்துக் கொள்ளவும். இரண்டு வகுப்புகள் என்றால் காலையில் ஒன்று; மாலையில் ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக வேண்டவே வேண்டாம்.

3. கேள்விகளை தைரியமாக எதிர்கொள்ளவும். எதிராளிக்கு விஷயம் தெரியாது. கூகிள் எல்லாம் கையில் கிடையாது. மைக்கோ  உங்கள் பிடியில். நீங்கள் சொல்லும் பதில்தான் அதாரிட்டி. எனவே, நிச்சயம் அதிரடியாக வேதவாக்கு அருளுங்கள்.

4. நன்றாக எடுத்தால், நிறைய சந்தேகங்கள் வரும். எளிமையாக வைத்துக் கொண்டேன். கேள்வி நிறைய வந்தது.

5. பதிவுக்கு காமென்ட் வருவது போல், ‘ரொம்ப நன்றாக இருந்தது’ என்று நாலு பேர் நடைபாதையில் நிறுத்தி நன்றி சொன்னபோது, சும்மா… ஜிவ்வென்றிருந்தது.

→ 1 மறுமொழிபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

காலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்

பெப்ரவரி 6, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

காலச்சுவடு கண்ணனை சந்தித்தது குறித்து எழுதுவதற்காக சேமித்தவை.

காலச்சுவடு காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருந்தது. வருடத்திற்கு நான்குமுறை மட்டுமே வரும் சஞ்சிகையில் சமகால விஷயங்கள் ஆறி அவிந்துபோன பிறகுதான் விவாதிக்க இயலும். பின்னர், இரு மாதங்களுக்கொருமுறை வெளியானது.

உலக்த்துத் தமிழர்களை கை கோர்க்கவைத்து, பரஸ்பர அறிமுகத்துடன் நிற்காமல், ஒருசேர திரட்டி ‘தமிழினி 2000′ கொண்டாட்டம். ‘தமிழ் இனி 2000′ என்னும் மாபெரும் திருவிழாவை ஒருங்கிணைத்து காலச்சுவடு சார்பாக நடத்திக் காட்டியது மிகப் பெரிய சாதனை.

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அந்த மொழியாக்கத்தை நூலாக வெளியிடும் பதிப்பகங்களுக்கு பல வகையில் ஆதரவு தருதல், நிதியுதவி செய்தலை பல்வேறு நாடுகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் அயர்லாந்தும் விதிவிலக்கல்ல.

இதைப் பற்றி முதலில் தெரிந்துகொண்டு என்னை ஊக்குவித்தவர் “காலச்சுவடு’ கண்ணன்.

இவரைத் தெரியுமா?: காலச்சுவடு கண்ணன்

எனக்குத் தெரிந்து சிறுபத்திரிகை நடத்துவது என்பதோ, நல்ல இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பகம் நடத்துவது என்பதோ தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட ஒரு காலம் உண்டு. பல எழுத்தாளர்கள், தாமே பதிப்பகம் நடத்தி, மனைவி நகைகளை அடகு வைத்து, புத்தகம் போட்டு, விற்பனை ஆகாமல், நூலாம்படை சேர்ந்து, எலிக்கும் கரப்புக்கும் தின்னக்கொடுத்தக் கதைகள் ஏராளம்.

மற்றொரு புறம் தி.நகர் பதிப்பகங்கள் செளகரியமாகத் தான் இருந்து வந்திருக்கின்றன. என்ன ஒன்று, எழுத்தாளர்களுக்கு மட்டும் ராயல்டி கொடுப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள். இல்லை புத்தகம் போட்டுத் தருவதே, அந்த எழுத்தாளருக்கு, பதிப்பகம் செய்யும் மகா கெளரவமாகக் கருதப்படும்.

இப்போதும், பல பழைய இலக்கியவாதிகள், தாம் புத்தகம் போட்டு, பத்திரிகை நடத்தி, இலக்கியச் சேவை செய்ததாகவும், ஆனால், ‘தமிழ் சமூகத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் திருத்தவே முடியாது’ என்றும் சபித்தபடி இருப்பார்கள். இதுபோல் யாராவது பேசத் தொடங்கினாலே நான் மெல்ல அங்கிருந்து விலகிவிடுவேன். கோபம் நெஞ்சு வரை கொப்பளிக்கும்.

உண்மையில், இவர்கள் எல்லாரும் நல்ல புத்தகம்தான் போட்டார்கள். அதில் தவறில்லை. ஆனால், விற்பனை செய்தார்களோ?

எனக்குத் தெரிந்து, விற்பனை என்பதோ, இலக்கியத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பதோ இழுக்கான ஓர் செயல் என்ற எண்ணம் சிறுபத்திரிகை சூழலில் ஆழ ஊன்றிப் போன கருத்து. அதனால்தான், பணம் தரக்கூடிய பெரிய பத்திரிகைகளுக்கு எழுத்தாளர்கள் எழுதினால், பலரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. சீரழிவுக் கலாச்சாரத்துக்குத் துணை போய் விட்டதாக ஒரு புலம்பல் அல்லது விலக்கல் தலைதூக்கும்.

மற்றொரு பக்கம் வேறொரு நிலை. இன்றைக்கும் தி.நகர் பதிப்பகத்தார்களில் பலர், இலக்கியம் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் அவ்வளவு நல்லதாக இல்லை. ‘அது படிச்சுட்டு வீசறதுதானே சார்’ என்ற எண்ணத்தோடுதான் புத்தகங்கள் தயாரிக்கிறார்கள். அதனால்தான், சாணிக் காகிதத்துக்கும் கிரிம்வோவுக்கும் நடுவே ஒயிட்ஓ என்றொரு ஜல்லா காகிதத்தை உபயோகிக்கத் தூண்டுகிறது. நாலு தரம் வேகமாகப் பிரித்துப் படித்தால், நிச்சயம் தையல் பிரிந்துகொள்ளும்.

இதுதான் எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் முன்புவரை கூட இருந்த நிலை.

பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. நல்ல இலக்கியத்தையும் அதனைப் படிக்கும் வாசகனிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது காலச்சுவடு. பெரும்பாலும், சிறுபத்திரிகை என்பது 300 முதல் 500 படிகள் வரை அச்சடித்து, வேண்டியவர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் அனுப்பிவிட்டு, மிச்சத்தை மூட்டை கட்டி வைத்துக்கொள்வார்கள். அல்லது சில புத்தகக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வருடமானாலும், பத்திரிகை விற்ற பணத்தை கேட்கவோ, அதற்கான ஒழுங்குமுறையான கணக்கோ வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் (அப்படியே கேட்டாலும் விற்ற பணம் கடைகளில் இருந்து திரும்ப வருவது என்பது குதிரைக்கொம்பு என்பது வேறு விஷயம்!)

புத்தகப் பதிப்புக்கும் இதே நிலைதான்.

எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. ஒழுங்கான கணக்கு வழக்கு, முறையான மார்க்கெட்டிங், விற்பனை முகவர் இல்லாத ஊர்களில் நல்ல வாசகரையோ எழுத்தாளரையோ முகவராக்குவது, மேலும் தொடர்ந்த ஃபாலோஅப். பத்திரிகை, பதிப்பகம் என்பதைத் தொழிலாகப் பார்த்தது காலச்சுவடு. வெறும் ஆர்வம் என்ற நிலைக்கு மேல், அதைத் தொழிலாக நினைத்து அணுகுவது எப்படி என்பதைக் காலச்சுவடுவிடம் இருந்துதான் கற்கவேண்டும்.

அதேபோல், புத்தகத்துக்கு அதற்குண்டான மரியாதையை ஏற்படுத்தித் தந்ததும் காலச்சுவடுதான். நல்ல தாள், அழகான அச்சு, தராமான தயாரிப்பு, கெளரவமான பார்வையை உருவாக்கிக்கொடுத்தது காலச்சுவடு என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.

காலச்சுவடு காட்டிய அந்த பாதைதான், இன்று செழித்துப் பெருகியிருக்கிறது. தமிழினி, சந்தியா பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், மருதா, கிழக்குப் பதிப்பகம் எல்லாம் தரமான தயாரிப்பை மேற்கொள்ள, காலச்சுவடே முன்னோடி. தரமான புத்தகங்கள் இன்று அதிகம் விற்பனையாகின்றன என்று ஒவ்வொரு பதிப்பகமும் நல்ல எழுத்தாளர்களைத் தேடிச் சென்று எழுதி வாங்கி வெளியிடுகின்றது.


காலச்சுவடு எந்தத் திசையில் செல்கிறது? – சிங்கப்பூர் காலச்சுவடு வாசகர் சந்திப்பு

கண்ணன்: காலச்சுவடு ஒரு நபர் நடத்திவரும் பத்திரிகையல்ல. ஒரு குழு இருக்கிறது. மாதம் ஒரு தடவை கூட்டம்போட்டு, இதழ் பற்றி விவாதிப்போம். நான் பதிப்பாளர் -ஆசிரியர் என்கிற முறையில் முடிந்த மட்டும் இக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். தலையங்கத்தில் வரும் கருத்துகளை எனது கருத்துகளாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆசிரியர் குழுவின் கருத்துதான் அது. காலச்சுவடு தமிழிலில் பெண் எழுத்தாளர்களுக்குகஙி கொடுக்கக்கூடிய இடம்பற்றிசஙி சொன்னார். அது பெருமளவு உண்மைதான். நிறையபஙி பெண் எழுத்தாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள், சிலர் கவனம் பெற்றிருக்கிறார்கள். உமாமகேஸ்வரியெல்லாம் காலச்சுவடுக்கு முன்பாககஙி கணையாழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள். கனிமொழி காலச்சுவட்டில் எழுதுவதற்கு முன்பே அவரது “கருவறை வாசனை” வெளிவந்துவிட்டது. கனிமொழி 2000க்குப் பிறகுதான் காலச்சுவடுக்கு எழுத ஆரம்பித்தார்கள். திலகபாமாவின் மறுப்புரை காலச்சுவடுக்குக் கிடைத்திருக்கிறது. அனேகமாக, அடுத்த இதழில் வந்துவிடும். திலகபாமா ஏன் அப்படிக் கருதினாரென்று தெரியவில்லை. எடிட் பண்ணாம ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய அவசியமில்லை. அதேபோல மாற்றுக்கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் பக்க வரையறை என ஒன்று இருக்கிறது. வாசகர் கடிதத்திற்கென்று ஆறேழு பக்கங்கள்தான் ஒதுக்க முடியும். ஆகவே, எல்லாவற்றையும் போடுவது என்பது சாத்தியமேயில்லை. ஆனால் எல்லா இதழ்களிலும் மாற்றுக்கருத்து என்பது பதிவாகிக்கொண்டேதான் இருக்கிறது.

கண்ணன்: ஒரு பத்திரிக்கையில விமர்சனங்கள் வரும்போது, அதை அந்தச் சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் எந்த அளவு புரிந்துகொள்ள முடியும்னு தெரியலை. விமர்சனங்கள் மூலமா மதிப்பீடுகள் வளருது. அப்புறம் சூழல்ல ண்ஸ்ரீர்ய்ஆக இருக்கிறவங்க, கருத்துகளைப் பரப்புறவங்க, இவங்களைப்பத்தி எல்லாம் விமர்சனங்களும் விவாதங்களும் முக்கியம்.

அசோகமித்திரன் லாபி பண்ணித்தான் பரிசு வாங்கினாரா என்பது முக்கியமில்லை. ஆனால், லாபி பண்ணாம எந்தப் பரிசும் உலகில் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்மறையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு எழுத்தாளருக்கு அவரது வாசகர்கள் லாபி பண்ணலாம், பதிப்பாளர் லாபி பண்ணலாம், இலக்கிய நிறுவனர்கள், ஊடகங்கள் லாபி பண்ணலாம். ஆனா எதுக்காகப் பண்றோம், யாருக்காகப்பண்றோம், ஏன் பண்றோம்ங்கிறது முக்கியம். ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஜாதிக்காகப் பண்றதுதான் ஆராயப்படவேண்டியது.

அசோகமித்திரன் தமிழ்ல மிக முக்கியமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் அவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல கவனம் கிடைச்சுது. மலையாளத்துல சக்கரியா ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு முன்னுரையில சொல்லியிருக்காரு, அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல் என்பதை நம்பமுடியவில்லை என்றும், இதன் மூலம் தமிழில் நல்ல எழுத்துகளே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட அசோகமித்திரனுக்குப் பரிசு கிடைத்தபோது, முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்நாதனும் சு. சமுத்திரமும் சன்டிவியில் அசோகமித்திரனுக்கு “சமூக நோக்கு இல்லை’ என்று பரிசளித்ததைக் கண்டித்துப்பேசினார்கள். அசோகமித்திரனின் எழுத்துக்கு சமூகநோக்கு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவருக்கு இன்னும் ஏன் ஞானபீடம் வரவில்லை என்பதுதான் கேள்வியா இருக்கு. ஆனா அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி விமர்சனம் வரும்போது அது பெரும் பிரச்சினையைக் கிளப்புவதில்லை. ஏனென்றால், அவர் ஒரு ல்ர்ஜ்ங்ழ்ச்ன்ப் ச்ண்ஞ்ன்ழ்ங் இல்லை. ஆனா வைரமுத்து போன்றவர்களை விம&

காலச்சுவடு நிகழ்வு: தமிழ் ஊடகங்களில் முஸ்லிம் குறித்த கலந்துரையாடலில் சலசலப்பு — Andhimazhai – Web Address of Tamils: “காலச்சுவடு இதழ் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்விற்கு”

காலச்சுவடு – சிற்றிதழ் அறிமுகம் 24 :: Andhimazhai – Web Address of Tamils

“தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வந்திருக்கிறேன்”

- சுந்தர ராமசாமி
காலச் சுவடு, ஆண்டுமலர்`91

நவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.

” காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்” என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

அதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.

1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.

எஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது முழுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.

தமிழினி ‘00, மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.

2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் “அற்றைத் திங்கள்” எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.

காலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

தலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.

காலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.

ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணன் பற்றி:

தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.

எதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.

மரத்தடி.காம்(maraththadi.com) – முதல் அனுபவம்…

காலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

காலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.

பாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.

கலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது?
புதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.

சுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை
என்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.

சாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன.
நாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.

-ve:

Tamil | Essay | Neelakandan | Kalachuvadu Kannan | Secularism | Ravikumar: “காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல் – நீலகண்டன்”

தமிழின் முதன்மையான முன்னணி கலை-: “இந்த பழம் புளிக்கும்: இலக்கிய வம்புகள் மற்றும் அரசியல் – ஆர்.அபிலாஷ்”

jeyamohan.in » Blog Archive » காலச்சுவடு நூறாவது இதழ்

Tamil-Ini2000-Aaraamthinai

ஷோபாசக்தி » காலச்சுவடும்.. திருமாவும்..

R P ராஜநாயஹம்: HERE IS THE RUB!: “நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. “

Tamil | Literature | Essay | A.Marx | A.Marx | Kalachuvadu: “தமிழ்ச் சிற்றிதழ்களின் முஸ்லிம் வெறுப்பு – அ.மார்க்ஸ்”

About Us | Kalachuvadu

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Movie Reviews: The Science of Sleep

பெப்ரவரி 6, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

ரொம்ப நாளாக வரைவோலைக் கிடங்கில் தூங்கியது. இனியும் எழுதுவேன் என்று நம்பிக்கையில்லை.

La science des rêves (2006) – Trivia: “Golden the Pony Boy is a reference to the novel ‘The Outsiders’. At one point in the novel someone tells the protagonist, Pony Boy, to stay golden.”

‘The Science of Sleep’ – MOVIE REVIEW – Los Angeles Times – calendarlive.com

Movie Review – The Science of Sleep – A Parisian Love Story in Forward, and Sideways, Motion – NYTimes.com

Beyond the Multiplex | Salon Arts & Entertainment

The Science of Sleep – All the King’s Men – Jesus Camp – Old Joy – New York Magazine Movie Review

The Science of Sleep | Film | The Guardian

Michel Gondry tells Xan Brooks about his weird dreams | Film | The Guardian

Michel Gondry | Film | guardian.co.uk

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

Washington DC: Jeyamohan Visit – Thanksgiving

பெப்ரவரி 6, 2010 · 1 மறுமொழி

வாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.

வாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.

வேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.

பாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect எல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.

டைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.

“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க?”

“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”

ஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.

அடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.

பரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.

முதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.

மணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ!’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.

நாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.

அடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.

வாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.

நடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே?! உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க! இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்!”

“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா?”

“முடிஞ்சா பார்க்கிறோம்! ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.

இரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.

மதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே? உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.

காலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.

கால் டம்ளர் டீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.

டிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழிகளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’

அப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.

அதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.

புறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன? எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது? அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்?

காலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது? அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன? கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது?

இப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.

‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க! அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை?” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.

சாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும்! அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா?’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.

அன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்!!’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.

இவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.

சத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.

பட்டால்தான் தெரிகிறது!


அப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:

1. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC

2. Tomb of the Unknown. Amphitheater. DC Washington. Arlington http://post.ly/1apD

3. Changing of guards in Unknown Soldier Tomb in Virginia Arlington Cemetery. http://post.ly/1anf

4. Jemo in Arlington Cemetery. DC. http://post.ly/1al7

5. Vote of thanks. Young chap; tense; mispronounces names. I am also mentioned. http://post.ly/1Zpq 8:59 PM

6. How Tamils shd stay united against Atomic power plants & nuclear energy? Y no TN leader against this cause. http://post.ly/1ZpC 8:50 PM

7. Why Nuclear, 123 deals, waste management, accidents, catastrophical predictions, Russia job creation. #energy http://post.ly/1Zp1 8:46 PM

8. Udhayakumar takes over the stage. Asuran book gets released by Sankarapandi. http://post.ly/1Zoo 8:44 PM

9. Koodankulam Nuclear project activist Uthayakumar speech. Pulithevan/LTTE contacts. Prabhakaran dead reminiscences. http://post.ly/1Zog 8:43 PM

10. Commemorative plaque presented to Jeyamohan in Washington DC Meet. http://post.ly/1Zmy 8:27 PM

11. Velmurugan Periyasamy tells abt his expediments with Periyar. EVR’s influence on self. Rationalization & influence. http://post.ly/1Zmn 8:23 PM

12. Shylaja abt Bheema’s characterization in Nathi Karaiyiniley. #JM abt Asoka Vanam. Girl wise inheritance property in his http://post.ly/1ZmC 8:19 PM

13. Tamil language classical structure: Qn. Ans by #JM: 4k divya prabhandham, current poets, Pramil. Su. Vilvaratnam. Abhi. http://post.ly/1Zlp 8:16 PM

14. Qn by him abt fights among writer thinkers. #JM Ans: Appreciates Periyar EVR 4 giving freedom to question. Gr8 ans lac http://post.ly/1ZlU 8:12 PM

15. JM has a gr8 reply abt Periyaar. Compares him with MN Roy, EMS, Ambedkar. EVR is not reason based! http://post.ly/1ZlD 8:07 PM

16. MP Siva chokes with emotion. Wants #JM to become a big writer. Qns abt EVR Periyar. Rationality & spirituality mix. http://post.ly/1Zkw 8:04 PM

17. Religion, Quran, suicides: search of life thru journeys in Ilakkiyam. http://post.ly/1ZkD 7:58 PM

18. Jeyamohan talks abt Oomai Chennai. Janakiraman, Jeyakanthan, Sujatha, Asoka Mithiran, Sundara Ramasamy. Kaadu: how it came into being?! 7:54 PM

19. Sornam Sankarapandi Sudalaimadan condemns the state of responses given by Tamil writers on demise of LTTE. #srilanka statements #sweep 7:50 PM

20. Dr. Thani Cheran disagrees with #JM on Therkku Vazhgirathu. Says TN is not influential wrt Tamil Eezham. http://post.ly/1ZjS 7:47 PM

21. Ans by #JM: A million Tamils r out of TN. How 2 safeguard if free country is separated out. US is best eg of coexistenc http://post.ly/1Zj3 7:41 PM

22. Qn by Saminathan. Multiplicity, diversity x individuality. Will it curtail rebels? How to ensure Independence. http://post.ly/1Zij 7:38 PM

23. JM ans abt education: economy, British looting. Hope for future gen. Famines, hunger will be history. http://post.ly/1ZiE 7:33 PM

24. I’m a reader of Sanga Chitrangal. The only interesting blog is #JM How to bring ilakkiyam to kids? #lit http://post.ly/1Zhr 7:29 PM

25. Shylaja shared her question with me. Y no female chars are shown as intelligent in his fiction; incl Anal & many Mahabh http://post.ly/1Zhb 7:26 PM

26. Sornam Sudalaimadan Sankarapandi qns abt self righteousness with dravidian movement is debased. http://post.ly/1ZhW 7:23 PM

27. AIIMS India Foundation Rave Shankar chats abt #JM blog; Ajithan school was moving. http://post.ly/1ZhA 7:19 PM

28. Audience is hysterical with #JM narration abt common Tamils addiction with Kumudam/Vikadan vs Kaadu http://post.ly/1Zh2 7:17 PM

29. Lit as infotainment vs prev twit. Ilakkiyam is useful in any nook & corner of the world. Why read fiction? http://post.ly/1Zgk 7:14 PM

30. The magnificence absorbed from the universe into self. Iota of world inside each of us. http://post.ly/1ZgZ 7:12 PM

31. #JM talks about Nithya Chaithanya Yathi. Narration definition. Inner vs outer world. Conversations – language http://post.ly/1ZgK 7:09 PM

32. Myladuthurai MP Siva snaps pictures in the #JM #DC Meet. http://post.ly/1ZfW 6:58 PM

33. Writer Jeyamohan gathering in Washington DC. Intro by Peter Yeronimouse. http://post.ly/1ZfE 6:55 PM

34. Library of Congress. Writer Jeyamohan with books, reference, Washington DC. http://post.ly/1ZS0 4:12 PM

35. With Velmurugan in Virginia. Washington DC visits Jeyamohan. http://post.ly/1Yrm 9:37 AM

36. DC welcomed JM. Car chat» Vishnupuram is an anti-kaaviyam. Yuvan’s Manal Keni. What defines a Kappiam? Discussion vs argument mthds Marabu.1:33 AM Jul 25

தொடர்புள்ள பதிவு:
Jeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE

→ 1 மறுமொழிபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Recent Notable Books: Library: To Read

பெப்ரவரி 6, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

1. How Beatles destroyed Rock n Roll. Elijah Wald. (Alt history of American pop music)

2. Dzanc books. Best of the web. Ed. Lee K Abbott & Nathan Leslie. $18.

3. Numerati. Stephen Baker. (Data in Google age. Business of numbers.)

4. Future of faith. Harvey Cox. (Rise & fall of belief, future of religion, dogma in Christianity.)

5. Imperial by William T Vollmann. (Mexico & USA. Allocation of water, American dream)

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , ,

மார்தா கோக்லி x ஸ்காட் ப்ரௌன் – மாஸசூஸெட்ஸ் செனேட் தேர்தல்

ஜனவரி 20, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

சென்னையை திமுக-வின் கோட்டை எனலாம். பாஸ்டனை தலைநகரமாகக் கொண்ட மாஸசூஸட்ஸ் டெமோக்ரட்ஸின் கோட்டை.

ஒரேயொரு விதிவிலக்கு உண்டு.

பெண் வேட்பாளர் நிற்கும்போது கட்சி மாறும்.

சுதந்திரம் வாங்கி 222 ஆண்டு கழித்து முதன்முதலாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். அதுவும் மாநிலத்தின் முக்கிய பதவிக்கு அல்ல. பொருளாளர்.

அதன் பிறகு முன்னேறியவர் மார்த்தா கோக்லி. அட்டர்னி ஜெனரலுக்கு போட்டியிட்டு வென்றார்.

இவர் தவிர துணை கவர்னராக இரண்டு பேர் தொற்றிக் கொண்டு வென்றுள்ளனர். அவர்கள், அடுத்த கட்டமாக கவர்னருக்கு நின்றபோது மண்ணைக் கவ்வினர்.

கட்சி பாகுபாடின்றி பெண்களை நிராகரிக்கின்றனர். ரிபப்ளிகன் ஆகட்டும்; சுதந்திரக் கட்சி ஆகட்டும். பெண் வேட்பாளரா? தோற்கடித்து விடு!

‘கோக்லியை கற்பழி!’

‘கோக்லியின் சூத்தில் ஏத்து!’ (“shove a curling iron up her butt”)

இதெல்லாம் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி அரங்குகளின் வெளியான கோபம்.

உள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு அலை இருந்ததாக யூனியன் தலைவர் சொல்கிறார்: “I’m not voting for the broad” – Teamster leader Robert Cullinane

சரி… மார்த்தா தோற்றதற்கு பெண்ணாகப் பிறந்தது மட்டுமா காரணம்?

1. வாக்காளர்களுக்கு இரத்தமும் சதையுமான தலைவர் வேண்டும். பற்றற்ற, விஷயம் மட்டும் பேசுகிற வழக்கறிஞர் தேவையில்லை. கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கோஷம், குடும்பஸ்தர் தோற்றம்: எல்லாம் ப்ரவுனிடம் இருந்தது.

2. தீவிர வலதுசாரி முழக்கங்களை பிரவுன் தவிர்த்தார். ரஷ் லிம்பா, சாரா பேலின் போன்ற துருவங்களை விட்டுவிட்டு, முன்னாள் நியு யார்க் மேயர் ரூடி ஜியூலியானி போன்ற அனைவருக்கும் கவர்ச்சியான ஆதர்சங்களை அழைத்தார்.

3. ஒபாமாவின் மோகம் முப்பது நாள் முடிந்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் ஜனாதிபதிக்கு மண்டகப்படி துவங்கும். அது இப்போது ஸ்டார்டிங்.

4. பொருளாதாரம்: முதலீட்டாளர்களுக்கு செம வருவாய். வங்கி முதலைகளுக்கு இரட்டிப்பு போனஸ். பங்குச்சந்தைக்காரர்களுக்கு கொண்டாட்டம். அன்றாடங்காய்ச்சிக்கு பஞ்சப்படி கூட கொடுப்பது நிறுத்தம். இப்படிப்பட்ட வேலையே இல்லாத சூழலில், வேலை தேடி சலித்தவர்களை வோட்டு போட சொன்னால்…

5. பணங்காய்ச்சி மரம்: மிட் ராம்னி கொணர்ந்தார். தலைநகரத்தில் லீபர்மனின் அழிச்சாட்டியத்தை விரும்பாதவர்கள் தந்தனர். குடியரசுக் கட்சி கொட்டியது. கையில காசு… பெட்டியில வாக்கு.

6. படுத்துக் கொண்டே ஜெயிப்போம்: ஆண்டிப்பட்டிக்கு வேட்பாளர் வராமலே ஜெயிக்கக் கூடிய கட்சி அ.இ.அதிமுக. அது மாதிரி கால் நகம் தேயாமல் வெல்லக்கூடிய இடம். இருந்தாலும், சுகவனங்கள் தோன்றிக் கொண்டேதானே இருக்கின்றனர்?

7. மாயை: ‘அவர்கள்தான் எல்லாம் செய்கிறார்கள். அறுபது போக்கிரிகளின் அழிச்சாட்டியம்! தங்களுக்கு என்ன வேண்டுமோ நிறைவேற்றிக் கொள்கிறார்கள்’ – இது குடியரசு கட்சியின் பிரச்சாரம். நாற்பது பேரை வைத்துக் கொண்டு எந்தவித மசோதாவையும் இம்மியளவு கூட நகரவிடாத கட்சியின் கூக்குரல்.

‘ஜட்ஜை நியமிக்க வேண்டுமா?’

‘முடியாது! போடுவோம் ஃபிலிபஸ்டர்.’

‘எங்க தல ஒபாமா நியமிப்பவர் என்றாலும்… ஜட்ஜ் உங்களுடைய குடியரசுக் கட்சிய சேர்ந்தவரப்பா… உங்காளுதான் என்பது தெரியுமில்லையா?’

‘இருந்தாலும் தர்ணா செய்வோம்! சட்டசபையை நடக்க விடமாட்டோம்! எங்க கட்சித் தல மெகயின் தோத்துட்டார்…’

இப்படியாக அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டையிட்டு, அந்தப் பழியை ஒபாமா தலையிலும், டெமோக்ரட்ஸ் மெஜாரிட்டி என்றும் தள்ளிவிடும் தந்திரம். (GOP Opposition Slows Obama’s Judicial Nominees : NPR)

8. விட்டுக்கொடுக்கும் மந்திரம்: சென்றதுடன் தொடர்புடையது. என் வீட்டில் ‘மதுரை’ ஆட்சிதான். இருந்தாலும், மீனாட்சி என்னவோ, ‘சிதம்பரம்’ என்று நடராஜனையே சொல்லவைக்கும் மேனேஜரின் சூட்சுமத்துடன் செயல்படுவார். ஒபாமாவிற்கு இந்த மாதிரி ராஜதந்திரம் போதவில்லை. போதிய பெரும்பான்மை இல்லாமலேயே காரியத்தை சாதித்துக் கொண்ட ஜார்ஜ் புஷ்ஷின் சாமர்த்தியத்தைப் பார்த்தால் கடுப்பு கலந்த ஆச்சரியம் வரவே செய்கிறது.

9. கோஷ உச்சாடனம்: ஆள்குறைப்பை முடித்தவுடன், ‘இதுதான் கடைசி வேலைநீக்கம். இனிமேல் சென்மாந்திரத்திற்கும் எவரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்!’ என்று வாய்கூசாமல் பொய் சொல்லும் மேலாளரின் திறமைக்கொப்ப, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசாமல், வாக்காளரின் கவலையை பேசுவது நல்ல வேட்பாளரின் லட்சணம். குழந்தைகளுக்கும் ஏகே 47; அதே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குழந்தை பெறும் திட்டம் என்பதெல்லாம் மனதோடு வைத்துக் கொண்டு, புறத்தே பிறிதொன்று பகர்வது வெற்றிக்கனியை சித்திக்கும்.

10. அதுதான் இந்தப் பதிவில் துவக்கத்தில் சொல்லியாகி விட்டதே. ‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்?’


அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை: 307,006,550

மிகக் குறைந்த வாக்காளர் கொண்ட 20 மாகாணங்களின் மக்கள் தொகை: 31,434,822

அதாவது 10%

ஓரு மாகாணத்திற்கு இரு செனேட்டர்கள்.

20 * 2 = 40 செனேட்டர்.

அமெரிக்காவில் மொத்த மாநிலங்கள்: 50; எனவே, மொத்த செனேட்டர்கள் எண்ணிக்கை: 50 * 2 = 100

அதாவது, வெறும் 10 சதவிகிதம், 40 சதவீதத்திற்கு வழிவகுத்தது.

இப்பொழுது நடுநிலையான தேர்தலில் அமெரிக்காவின் குறுக்குவெட்டு சித்திரமான மாநிலத்தில் இருந்து உண்மையாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டர் – ஸ்காட் ப்ரௌன்.

வாழ்த்துகள்.

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

ஜனவரி 15, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel’s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

10 American Comedy Serials

ஜனவரி 13, 2010 · 2 மறுமொழிகள்

வேலை அதிகமானால், நகைச்சுவை நாடகங்களை மனம் நாடும். உழைக்கும் வாழ்க்கை நசையானால், சுஜாதாதான் எடுக்கத் தோன்றும். ஜெயமோகனைத் தவிர்க்கும். அடுத்தவரின் துன்பியல் நிகழ்வான செய்திகளை சாய்ஸில் விடும்.

இவ்வாறாக ப்ரைவேட் ப்ராக்டிஸ், சி.எஸ்.ஐ., லா அன்ட் ஆர்டர் அடிதடியை கடந்த வருடம் தவிர்த்துவிட்டேன். வாரந்தோறும் விரும்பிய ‘பாஸ்டன் லீகல்’ முடிந்து போனது. அதற்கு பதிலாக பார்க்கத் துவங்கிய சீரியல்களுக்கு சிறுகுறிப்பு.

எனக்குப் பிடித்த தர வரிசைப்படி உள்ளன.

1. The Big Bang Theory

இத்தனை நாள் எப்படி தவறவிட்டேன்? நாலு அறிவாளிகளும் ஒரு அழகியும். a) அறிவியல்காரர்களுக்கு குட்டி பிடிக்கத் தெரியவில்லை. b) அதில் ஒருவன் தேசி என்.ஆர்.ஐ. c) இன்னொருவன் யூதன். d) எதற்கும் ஆராய்ச்சிபூர்வமாக கர்மசிரத்தையாக பதிலளிக்கும் ஹீரோ. எதிர்த்தவீட்டு பருவப்பெண்.

கனஜோர்.

நிகழ்ச்சியின் முடிவில் தயாரிப்பாளர் கம் இயக்குநர் சக் லோர் போடும் ஸ்லைடு மகா அற்புதம். இங்கே கிடைக்கும்.

2. Modern Family

மூன்று குடும்பங்களின் கதை.

பதின்ம வயதில் மகள்; அக்காவின் அழகை வெறுத்து படிப்பில் புலியாக நினைக்கும் தங்கை; இருவருக்கும் பிறகு வந்த குட்டிப் பையன். பக்கத்து வீட்டு ஆன்ட்டியை ஜொள்ளிடும் அப்பா. கணவனின் பிறந்தநாளை கண்டுகொள்ளாத அம்மா.

அந்த அம்மாவின் பெற்றோர் விவாகரத்தானவர்கள். அப்பா பெருந்தனக்காரர். சிறுசு + இளசு இலத்தீன குட்டியை இரண்டாந்தாரமாக, இலவச இணைப்பான டீனேஜ் மகனோடு கொண்டவர்.

அவருடைய இன்னொரு மகன் மூன்றாவது குடும்பம். தற்பால் திருமணம் புரிந்தவர். வியட்நாமில் இருந்து கைக்குழந்தையை தத்தெடுத்தவர்கள்.

மாமனார் x மாப்பிள்ளை; ஓரினச்சேர்க்கையில் நெளியும் தாத்தா; டேட்டிங் போகும் மகளின் ஊரடங்கு; சம்பவங்களுக்கா பஞ்சம்?

எல்லாவற்றிலும் டாப்: யார் பாட்டி? எவர் அக்கா? என்று விநோதமாக அழைக்கும் நேரம்.

3. The Middle

நான் பார்ப்பது மனைவிக்கு பிடிக்காது. மகளிரின் லைஃப்டைம் திரைப்படம் பார்ப்பதற்கு ‘அத்திப்பூக்கள்’ சகித்துவிடலாம்.

இரண்டுக்கும் நடுவாந்தரமாக ஒத்துவருகிறது ‘மிடில்’.

அமெரிக்காவின் நட்டநடுவாந்தர நகரம். இன்டியானா மாகாணம். கார் விற்றால் கமிஷன் பெறும் இல்லத்தரசி. தொழிற்சாலையில் உழலும் குடும்பத் தலைவன். வயசுக்கு வந்த கோளாறு கொண்ட மூத்த மகன். புத்தகப் புழுவாக சகாக்களை ஒதுக்கும் குட்டிப் பயல். இருவருக்கும் இடையே ஆயிரம் கலைகளில் தேர்ச்சி பெற முயலும் மகள்.

அக்கம்பக்கத்தில் தெரிந்த, சொந்த வாழ்வில் சந்தித்த நிஜக் குடும்பங்கள் நினைவுக்கு வருகிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று ரிசஷனுக்கு ஏற்ற காவியம்.

4. The League

இதுவரை சொன்னது எல்லாமே வயது வந்தோருக்கு மட்டும் உகந்தது என்றாலும், லீக் கொஞ்சம் அதிகப்படி அசைவம்.

கூடைப்பந்து சீஸன் ஆகட்டும்; அமெரிக்க கால்பந்து உற்சவம் ஆகட்டும். அலுவலிலோ அடுக்ககத்திலோ ஆள் சேர்த்து கூட்டணி அமையும். இருக்கும் அணிகளில் இருந்து ஆட்டக்காரர்களை விர்ச்சுவல் ஏலம் எடுத்து ஷாரூக்கான் போல், சொந்தமாக்கிக் கொள்ளலாம். நிஜ ஆட்டங்களில் ஆடுவதைப் பொறுத்து, வெற்றி தோல்வி கணிக்கப்படும்.

இதைப் பின்னணியாகக் கொண்ட களம்.

கணவனைக் கட்டியாளும் மனைவி. தோட்டத்தில் இருந்து பச் பச்சென்று பறித்தது போல் வெட்டிவேரு பிடுங்கிய வாசத்துடன் பிரிந்த தம்பதியர். பால்குடி குழந்தை கொண்டதால் பாலுறவு மறந்த தம்பதியர். தேசிப் பெண்ணை டாவடிக்கும் வழுக்கையன். அக்மார்க் பேச்சிலர். ஆடம்பர பிரம்மச்சாரி.

பரவாயில்லை.

வெகு முக்கியமாக கிடுக்கிப்பிடி செக்ஸ், கொங்கையின் கனம், சவாலில் தோற்றதால் நிர்வாணம் என்று பேசாப்பொருளை பாடுபொருளாக்கியதால் ருசிக்கிறது.

5. 30 Rock

ரொம்ப காலமாகப் பார்த்து வருவதால் போரடித்துவிட்டது. ‘சாடர்டே நைட் லைவ்’ டீமின் சாகசங்கள்.

உங்களுடைய சி.ஈ.ஓ.வை அலெக் பால்ட்வின் நினைவுறுத்தலாம். நியுயார்க் மாந்தருக்கு டினா. ஒவ்வொரு வாரமும் பெருந்தலை எவராவது எட்டிப்பார்ப்பதாலேயே இன்னும் ஈர்க்கிறது.

6. Gary Unmarried

மணவிலக்கு ஆகியபிறகும் ஆதுரத்தோடு காதல் பாராட்டும் முன்னாள் கணவன் – மனைவி. கணவன் பிற பெண்களுக்குத் தூண்டில் போடுவதும், அதன் பின் விவாகரத்தான முந்தையவளுக்காக, இன்றையவளை த்ராட்டில் விடுவதும் வாராந்தர வழக்கம்.

ஒரே மாதிரி அமையும் நிகழ்ச்சியாகி விட்டது தற்போதைய குறை.

என்னவாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் சிலப்பதிகார பண்பாட்டை மீட்டுருவாக்குவதால் மகத்துவம் அடைகிரது.

7. Better off Ted

இதுவும் மொக்கை டைப்.

அலுவலில் இடைநிலை அதிகாரி டெட். இவனுக்கு மேலதிகாரி ஸ்கர்ட் பொம்மை. செக்ரடரியுடன் கொஞ்சம் கிஸ் உண்டு. கீழே இரு டாம் அன்ட் ஜெர்ரி ஆராய்ச்சிக்காரர்கள்.

பணியிடத்தில் போடப்படும் அடாவடி தீர்மானங்கள், பாலியல் அத்துமீறல்கள், ஆகியவற்றுடன் அகமும் புறமுமாகிய குடும்ப – குழும குழப்பங்களும் போதிய அளவில் கலக்கப்பட்டு தரப்படும்.

8. It’s Always Sunny in Philadelphia

இப்பொழுதுதான் முழு சீஸனும், சென்ற வருடத்திய எபிசோடுகளுமாக முழு வீச்சில் இறங்கி இருக்கிறேன். கொஞ்சம் கருப்பு… அதாங்க டார்க் வகையறா. அதற்காக ப்ரூனோ அளவு விகாரமல்ல.

களுக் சிருப்பு வராது. ரத்தக்கண்ணீர் ப்ளேடு நிச்சயம் கிடையாது. ஜோக் புரியாமல் தூக்கத்தில் புரிந்துவிடும் அபாயம் உண்டு.

9.Two and a Half Men

சென்ற ஆண்டுகளில் பார்த்தது. பத்தில் ஒரு ஒடம் தரலாம். இப்பொழுது நிறுத்தியாகி விட்டது.

அண்ணன் – தம்பி. அண்ணன் பணக்காரன். தம்பி ஜீவனாம்சத்தில் வாழ்க்கையைத் தொலைத்து, அண்ணனிடம் அண்டியிருக்கிறான். அண்ணாவுக்கு ‘ஆசை நூறு வகை; வாழ்வில் ஆயிரம் சுவை’. தம்பிக்கு மகன் மட்டுமே.

இதில் வரும் பெண்கள் லட்சணமாயிருந்தது, பார்க்கத் தூண்டியது.

10. Cougar Town

இதெல்லாம் நான் பார்ப்பதாக சொன்னால் இமேஜ் போயிடுங்க.

10.  Community

தினந்தோறும் ஜே லீனோ வந்து கழுத்தறுத்ததால் இந்த மாதிரி மொக்கை பார்க்க வேண்டி வரும்.

ஐயா! ஜாலி… ஜே லேனோ நிறுத்தப் போறாங்களாம்… இனிமே, கத்தியின்றி துப்பாக்கியோடு என்.சி.ஐ.எஸ். கொண்டாடலாம்.

கட்டாங்கடைசியாக ஓர் எச்சரிக்கை: Accidentally on Purpose பார்த்து விடாதீர்கள். டீலா/நோ டீலா கூட தாங்கி விடலாம். ஆனால், Knocked Upனினும் அடைந்த வேதனையை நீவிர் தவிர்ப்பீர்.

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Avatar: அவதார்

ஜனவரி 12, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

1. அமெரிக்கா வந்த புதுசு. ஜேம்ஸ் கேமரான் குறித்து தெரியாத வயசு. கூடவே நாலஞ்சு பொண்ணுங்க வேற கூப்பிடறாங்க. டிக்கெட் எளிதாக கிடைத்துவிடுகிறது. ‘டைடானிக்’ மட்டும் மூழ்கவில்லை. வலைப்பதியாத அந்தக் காலத்திலேயே படம்  பார்த்தபிறகு எழும் இயலாமை ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ பார்த்த எஃபக்ட் கொடுத்தது.

அந்தப் படத்திலாவது பிறந்த மேனி கேட் வின்ஸ்லட் ஆறுதல். அதுவும் இங்கே லேது. மிஷேல் ரோட்ரிக்ஸ் இருந்தும் அவதாரில் ஏமாற்றம்.

2. தமிழருக்கு லாஜிக் ஓட்டை சொல்லாமல் இருக்க வேண்டுமானால், சிம்பு படமாக இருக்க வேண்டும் அல்லது ‘சிவாஜி’யாக இருக்க வேண்டும்.

3. கடவுள் என்றாலே லேட்டாகத்தான் வருவார். ‘காக்க காக்க’வில் அன்புச்செல்வன் அனைத்தையும் இழந்தாலும் ஹீரோ என்றறியப்படுவது போல்  ஈவா தெய்வமும் வெகு தாமதமாக, தன்னை வணங்கும் கூட்டம் பஸ்மமான பிறகே தலை நீட்டுகிறது.

4. ஜூராசிக் பார்க்கில் பார்த்த டைனோசார். ஜுமாஞ்சியில் பார்த்த இரணகளம். ஆவியோடு பேசும் Defending Your Life. அவியல் பிடிக்கும்தான். அவதார் அவியல் அல்ல; ஆட்டோவில் கொட்டிப்போன கேரியர் சாப்பாடு.

5. அமரும் இடத்தில் கூட அதிர்வு கொடுக்கும் 3டி நுட்பம் வெகு அபாரம். தூக்கம் எட்டிப்பார்த்தால், எழுப்பிவிடுகிறது.

6. நாவிக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? அஜீரணம் உண்டாகுமா? ரத்தம் ஒரே நிறமா? அபான வாயு காமெடி எல்லாம் கிடைக்குமா?

7. ஜேம்சுக்கு படம் எடுக்கத் தெரியாவிட்டாலும் சந்தையாக்கத்தில் கெட்டி. இவருடன் எந்தப் படமும் போட்டி போடாமல் இருப்பது உபரி. உலகவெம்மை ஆதரவாளர்களும், இராக் ஆக்கிரமிப்பு அசூயைக்காரர்களும், அமெரிக்கன் காப்பாற்றுவான் வலதுசாரிகளும் தங்கள் கொள்கை, இலட்சியங்களுடன் பிணைத்துப் பார்க்க வைக்கும் மார்க்கெடிங் மாயாஜாலத்துக்கு ஜெய் ஹோ!

8. புத்தம்புது பூமி வேண்டும்! நானும் நாவியாக மாறி இளவரசியுடன் ஜொள்ளு விட்டு, பொருளாதார வீக்கம் கவலை மறந்து, நாளொரு சி#ம், பொழுதொரு Perlம் கற்காமல், குதிரையில் பறந்து… பறந்து…

9. வாடகை வீட்டை காலி பண்ண சொன்னால், ஜாகையை மாற்றுவீர்களா? இல்லையா? நாவிக்கள் கூட வேற மரம் பார்த்து குடிபோயிருக்கலாம் என்று இயக்குநர் எண்ண வைக்கிறார்.

10. வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ பார்க்குமளவு பெரிய விஷயம் எதுவும் இல்லை என்று தோணவைத்தது எது? நமீதாவா? அய்யனாரின் இரானியப் பட விமர்சனங்களா? வீட்டிலேயே கிடைக்கும் 60″ டிவியா? எது…

சில பார்வைகள்:

  1. தமிழ்ஹிந்து » திரைப்பார்வை: அவதார்
  2. jeyamohan.in » Blog Archive » அவதார் – ஒரு வாக்குமூலம்
  3. ஏன் இப்படி…!: அவதார் – இது சினிமா மட்டுமல்ல!
  4. Op-Ed Columnist – The Messiah Complex – NYTimes.com
  5. IdlyVadai – இட்லிவடை: அவதார் – விமர்சனம்
  6. அதிஷா: ஆ… அவதார்!
  7. Cameron’s Avatar: The emerging zeitgeist? :: Vijayvaani.com
  8. ‘Avatar’ team brought in UC Riverside professor to dig in the dirt of Pandora | Hero Complex | Los Angeles Times
  9. இளையதளபதியின் அவதார்…அவதார் படத்தில் விஜய் நடித்திருந்தால்….
  10. கணேஷின் பக்கங்கள்!: இவள மாதிரி பொண்ணு பாரும்மா?

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

தசாப்தம்

ஜனவரி 4, 2010 · 2 மறுமொழிகள்

“Our incomes are like our shoes; if too small, they gall and pinch us; but if too large, they cause us to stumble and to trip.”
- Philosopher John Locke

கடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது?

இன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now?’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.

சொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா?

சுயநலம்

எனக்காக யோசித்தேன்.

2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.

க்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை

இதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.

கல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.

எளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்?

நாற்பது வயதில் நாய்க்குணம்

Peer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.

கொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.

Contractors as Prostitutes vs Marriage as Full Time Employment

நிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.

மனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.

மத்தியமரில் இத்தனை வகையா?

தாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்?

1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.
2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்
3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்

அமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்?

வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.

பொறியிழந்த விழியினாய் போ போ போ

அமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.

இத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா? அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்?

சத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.

Call center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது?

லட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்?

நகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்?

அடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Vijay & Anushka in Vettiakkaaran: Karikalan Kaala Pola

December 29, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Vijay’s Vettaikaaran: Nan Adicha Thanga mata

December 29, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்புப் புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ

ஏய் வாழு வாழு வாழ விடு
வாழும் போதே வானைத் தொடு

வம்பு பண்ணா வாளை எடு
வணங்கி நின்னா தோளைக் கூடு

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்கும் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழாதே
வீண் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

வரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சை மீறாதே
தீயோர் சொல் கேட்காதே

ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையினா உன்ன நீயே மாத்திக்கோ

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

En Uchi Mandaila: விஜய் & அனுஷ்கா – வேட்டைக்காரன்

December 29, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

என் உச்சி மண்டையில சுர்ங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ங்குது
டர்ங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்

கை தொடும் தூரம் காச்சவளே
சக்கரையால செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே
சுந்தரியே

தாவணி தாண்டி பாத்தவனே
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
சந்திரனே

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது
டர்ருங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்ரு

மீயா மீயா பூனை
நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை
நீ மயக்குற மச்சான

வில்லு கட்ட மீசை
என் மேல பட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆசை
உன் கிட்ட வந்து பேச

மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஒவியமா உன் உருவம் வரைஞ்சிடுவனே

உள்ளங்கையா நீ இருந்தா
ரேகையாக நான் இருப்பேன்
ஆயிலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பனே

என்னுச்சி மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்
உன்னை நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்ர்
கிட்ட நீ வந்தால் விர்ர்ர்ர்ர்ர்
டர்ர்ர்ர்ர்ர்ர்

அஞ்சு மணி பஸ்
நான் அதை உட்டா மிஸ்
நான் ஆத்தா வுட்ட புஸ்
ஒரே ஒரு கிஸ்
நீ ஒத்துக்கிட்டா யெஸ்

கம்மாங்கரை காடு
நீ சுட்ட கருவாடு
பந்திய நீ போடு
நான் வாரேன் பசியோடு

மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஏய் அப்பாவியா மூஞ்சிய வெச்சு
அங்க இங்க கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்கரியேடா

துப்பாக்கியா மூக்கை வச்சு
தோட்டா போல மூச்ச விட்டு
நீய்ம் என்னை சுட்டு தள்ள பாக்கரியேடி

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Puli Urumudhu: Vijay’s Vettai Kaaran

December 29, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வரதப் பாத்து

கொல நடுங்குது குல நடுங்குது
துடிதுடிக்குது துடிதுடிக்குது

நில குலையுது நெல குலையுது
வேட்டைக்காரன் வரதைப் பார்த்து

பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க

பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

வரான் பாரு வேட்டைக்காரன்

யார் இவன் யார் இவன் யாரிவன்
அந்த அய்யனார் ஆயுதம் போல் கூர் இவன்

இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் தமிழதான் மொண்டு தினம் குளிச்சிடுவான்

இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்

போடு அடியப்போடு போடு அடிய போடு
டக்கரு டங்கரு டக்கரு டக்கர்னா
போடு டக்கரு டங்கரு டக்கரு டக்கர் னா

யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்

சினத்துக்கு திறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை இங்கு எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிறுக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடிய போடு போடு அடிய போடு

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Microsoft Excel நாமாவளி

December 17, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

அசல்: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

சி ஷார்ப்பு, டாட் நெட்டு, ஏயெஸ்ப்பி, ஜாவா, பீன்சு, அபாச்சி, லீனக்ஸு, சீக்வலு, ஆரக்கிளு, டிபீட்டூ, வெப்ஸ்பியரு, டிப்கோ, சாப்பு, பீப்பிள்சாஃப்டு, பாஸ்கல், பியெச்பி, பெர்ல், ஐஐஎஸ்ஸு, பிஸ்டாக்கு, அஷூரு, கோ, எர்லாங்கு, அடோபு, ப்ளாசு, அஜாக்சு, எச்டியெமலு, எக்செமல்லு, அதா, சி, போர்ட்ரானு, அசெம்பிளி, வோர்டு, யூனிக்சு, கோபாலு, ட்விட்டரு, பேஸ்புக்கு, பயர்பாக்சு, சிப்ளசுபிளஸு, 68330, 8085…

இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, எக்ஸெல்தான் டாப்பு

→ மறுமொழி இடுகபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Happy Tiger Woods Month

December 16, 2009 · 1 மறுமொழி

Today: On December 16, 1773, after officials in Boston refused to return three shiploads of taxed tea to Britain, a group of colonists boarded the ships and destroyed the tea by throwing it into Boston Harbor.

Live a good life. If there are gods and they are just, they will not care how devout you have been, but will welcome you based on the virtues you have lived by. If there are gods, but unjust, then you should not want to worship them. If there are no gods, then you will be gone, but will have lived a noble life that will live on in the memories of your loved ones.

- Marcus Aurelius, philosopher and writer (121-180)

Aurelius wrote his Meditations in Greek as a source for his own guidance and self-improvement. He had been a priest at the sacrificial altars of Roman service and was an eager patriot. He had a logical mind and his notes were representative of Stoic philosophy and spirituality.

  1. A cucumber is bitter. Throw it away. There are briers in the road. Turn aside from them. This is enough. Do not add, “And why were such things made in the world?”
  2. Soon you’ll be ashes or bones. A mere name at most–and even that is just a sound, an echo. The things we want in life are empty, stale, trivial.
  3. Never regard something as doing you good if it makes you betray a trust or lose your sense of shame or makes you show hatred, suspicion, ill-will or hypocrisy or a desire for things best done behind closed doors.
  4. Words that everyone once used are now obsolete, and so are the men whose names were once on everyone’s lips: Camillus, Caeso, Volesus, Dentatus, and to a lesser degree Scipio and Cato, and yes, even Augustus, Hadrian, and Antoninus are less spoken of now than they were in their own days. For all things fade away, become the stuff of legend, and are soon buried in oblivion. Mind you, this is true only for those who blazed once like bright stars in the firmament, but for the rest, as soon as a few clods of earth cover their corpses, they are ‘out of sight, out of mind.’ In the end, what would you gain from everlasting remembrance? Absolutely nothing. So what is left worth living for? This alone: justice in thought, goodness in action, speech that cannot deceive, and a disposition glad of whatever comes, welcoming it as necessary, as familiar, as flowing from the same source and fountain as yourself.
  5. It is like the officer who engaged a comic actor dismissing him from the stage. “But I have not played my five acts, only three.” “True, but in life three acts can be the whole play.”
  6. How much more grievous are the consequences of anger than the causes of it.
  7. As a horse when he has run, a dog when he has caught the game, a bee when it has made the honey, so a man when he has done a good act does not call out for others to come and see, but he goes on to another act, as a vine goes on to produce again the grapes in season. Must a man then be one of these, who in a manner acts thus without observing it? Yes. What more dost thou want when thou hast done a man a service? Art thou not content that thou hast done something conformable to thy nature, and dost thou seek to be paid for it, just as if the eye demanded a recompense for seeing, or the feet should demand a recompense for walking?
  8. I used to think it was awful that life was so unfair. Then I thought, wouldn’t it be much worse if life were fair, and all the terrible things that happen to us come because we actually deserve them? So, now I take great comfort in the general hostility and unfairness of the universe.
  9. Take away your opinion, and there is taken away the complaint, [...] Take away the complaint, [...] and the hurt is gone
  10. Let opinion be taken away, and no man will think himself wronged. If no man shall think himself wronged, then is there no more any such thing as wrong.

Meditations, an online version from Project Gutenberg (text is from The Golden Book of Marcus Aurelius, translated by Meric Casaubon, published 1906-1908.)

On December 16, 1773, after officials in Boston refused to return three shiploads of taxed tea to Britain, a group of colonists boarded the ships and destroyed the tea by throwing it into Boston Harbor.

→ 1 மறுமொழிபகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஆப்கானிஸ்தான் போர்

செப்டம்பர் 30, 2009 · 4 மறுமொழிகள்

Surrender of Afghanistan police force to unarmed Taliban with glee in
Baghlan province :: Full Show: September 29, 2009 | Worldfocus (The segment starts at 11:33)

வீடியோவில் விரிவாக காண்பிப்பதன் செய்தி சுருக்கம்:

அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களையும் போர்வீரர்களையும் நம்ப முடியவில்லை. எழுபது ஆப்கானிஸ்தானிய படைவீரர்கள், வெறும் பத்து பேர் கொண்ட தாலிபானிடம் சரணடைகிறார்கள்.

இத்தனைக்கும் தாலிபேனிடம் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கவில்லை; குண்டு போடப்படவில்லை.

சாதாரணமாக, இந்த மாதிரி சரணாகதிகளுக்கு, கண்ணிவெடி போன்ற குண்டுவெடிப்புகள் காரணமாக இருக்கும். இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. தங்கள் துப்பாக்கி, இன்ன பிற ஆயுதங்களை வெகு சந்தோஷமாக அல்-க்வெய்தாவிடம் கொடுத்துவிட்டு, ஜீப்பில் ஏறி சென்று விடுகிறார்கள்.

இப்பொழுது இந்த திருட்டு வீடியோ வெளிப்பட்டது ஏன்?

1. நிஜமாகவே அல் – கெவெய்தாவிற்கு விசுவாசமானவர்கள். தாலிபான் இட்ட கோட்டைத் தாண்டாதவர்கள்.

2. ஊழல், லஞ்சம் மலிந்த நாடு. சோம்பேறிகள்… பொலிடிகலி கரெக்டாக சொன்னால், உல்லாசபுரிவாசிகள் அபப்டித்தான் பொறுப்பின்றி நடந்துகொள்வார்கள்.

3. ஊரான் வீட்டு அமெரிக்க நெய்; கடைத் தேங்காய்; வழியில் அல்லா. உடைக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் மேலும் படைவீரர்களை அனுப்பி வைக்குமாறு இராணுவத் தளபதி வெளிப்படையாகவும், வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களின் மூலமாகவும் அழுத்தமளித்து வருகிறார். அப்பொழுது, இந்த மாதிரிக் காட்சிகள் வெளியாவதால், உள்ளூர் காவலர்களின் லட்சணம் உலக அரங்கில் அம்பலமாகும்.

ஒபாமாவும் துணை ஜனாதிபதி பிடெனும் மேலும் மேலும் படை வீரர்களை குவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆப்கானிஸ்தானே தன்னிறைவை எட்டவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்கள். கடந்த ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை பராக் ஒபாமா வலியுறுத்தி வந்தார்.

இராக்கில் இருந்து முழுமையான படை விலகல். ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் ஆள் கூட்டப்படும். அதன் பின் முழுமையாக, வெகு சீக்கிரமாகவே அனைவரும் சொந்த நாடு திரும்புவார்கள். இதுதான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை.

ஜார்ஜ் புஷ்ஷும் டிக் சேனியும் பதவியிறங்கிய பின் சோகத்தில் ஆழ்ந்த Military Industrial Complexம் இப்பொழுது சுறுசுறுப்பாக இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட விரும்பும்.

Matt-bors-comics-cartoons-graphics-swimsuit-afghan-war-draft-GWB-bush-GOP-dems-reps

தொடர்புள்ள பதிவுகள்:

1. Why We Fight – A Film By Eugene Jarecki :: சண்டக்கோழி அமெரிக்கா

2. Three Books and a Movie

3. Pratap Chatterjee on “Halliburtons Army”

கொசுறு விழியம், பேட்டி:

The AfPak War: Combating Extremism in Afghanistan and Pakistan – washingtonpost.com

→ 4 மறுமொழிகள்பகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

செத்தான் பிரபாகரன்

செப்டம்பர் 30, 2009 · 36 மறுமொழிகள்

Stars_&_Stripes_Germany-newspapers-skull-women_Hitler_Dead2'Hitler's Skull' Is A Woman's, Say DNA Tests – Yahoo! News UK: A skull long believed to be that of Adolf Hitler actually belonged to a woman, according to an American scientist who has taken DNA samples from it.

அந்தக் காலத்தில் மரபணு சோதனை கிடையாது. எனவே, இதுதான் ஹிட்லரின் பிணம்; இங்குதான் புதைக்கப்பட்டது என்றவுடன் எவரும் அதை எடுத்து வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை.

ஹிட்லர் என்று சொல்லப்படும் எலும்புக்கூடை எடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. நடத்தினால், அது பெண்ணின் மண்டையோடு என்று தெரியவந்திருக்கிறது.

சரி… அடால்ஃபின் நீண்ட நாள் காதலியின் பிணமாக இருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. ஹிட்லரின் கடைசி நிமிஷ மனைவியான் ஈவா பிரவுனுக்கு வெறும் முப்பத்திமூன்று வயதுதான். அகழ்வாராயப்பட்ட பிணத்திற்கு நாற்பது ஆகிவிட்டது.

ஜெர்மனியில் ஹிட்லர் இறந்ததற்கு அடையாளமாக அவரின் இந்த மண்டை ஓட்டுப் பகுதியையும், பற்களையும் மட்டுமே ஆதாரமாக நம்பி இருந்தார்கள். அவரின் மோவாய்க்கட்டு மட்டும்தான் ருஷியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மண்டை ஓடு செல்லாது என்றாகி விட்ட தருணத்தில், பற்களை தரமாட்டோம் என்று ரஷியா மறுத்துவிட்டது.

சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஹிட்லரும் இறக்கவில்லையா? இன்னும் உயிரோருக்கிறாரா?

போரின் இறுதியில் நமக்குத் தேவை நிம்மதி. செத்தான் கொடுங்கோலன் என்னும் செய்தி. அதைக் கொடுக்கத்தான், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சொல்கிறார்களோ?

இதனால்தான் விடுதலைப் புலி ‘பிரபாகரன்’ தன்னுடைய ஹேப்பி பர்த்டே ஆன மாவீரர் நாள் கொண்டாட மீண்டு வருவார் என்று சீமான் சொல்கிறாரோ!

BBC NEWS | Europe | 'Hitler skull' revealed as female

→ 36 மறுமொழிகள்பகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Returning back to an empty home

செப்டம்பர் 30, 2009 · 6 மறுமொழிகள்

பள்ளிக்கூடம் ஆரம்பித்தாகி விட்டது. உங்கள் வீட்டில் கணவன் & மனைவி, இருவருமே வேலைக்கு செல்கிறீர்களா?

இந்தியா என்றால் கவலை இல்லை.

முந்தானை முடிச்சு + தலையணை மந்திரம் என்றால் அம்மாவின் பெற்றோர் இருப்பார்கள். பாரம்பரியம், பழமைவாதம் என்றால் மாமனார் + மாமியார். முற்போக்கு, நாகரிகம் என்றால் சமபங்காக இருவருக்கும் டூட்டி போட்டிருப்பீர்கள். அருணாச்சல் பிரதேசம் போன்ற சீனப் பிரதேசங்களில் வாசம் என்றால், சல்லிசாக பணியாட்களை நியமனம் செய்திருப்பீர்கள்.

அமெரிக்காவில்?

பள்ளியிலேயே ஐந்துமணி வரை வைத்திருக்கும் காப்பகம் உண்டு. அதில் எல்லா வகுப்புகளும் கலந்து கட்டியிருக்கும். Gangகள் இருக்கும். உங்கள் குழந்தையை விட பெரிய வகுப்பினரும் இருப்பார்கள். போதுமான அளவு பாதுகாப்பானது. ஆனால், ஆங்காங்கே நடக்கும் மிரட்டல், உருட்டல்களைக் கண்டு காணாமல் விட்டுவிடுவார்கள்.

After school daycareன் மேய்ப்பர்களே பல சமயம் இறுதியாண்டு மாணவர்களாக இருப்பது ஒரு காரணம். பாலியல் துன்புறுத்தல்கள், WWF சண்டைகள், கத்தியால் கிழித்து குருதி வருமளவு திரைமூடி பிணக்குகளை தீர்த்துவிடுவதிலேயே அவர்கள் நேரங்கழிந்து விடுவது இன்னொரு முக்கிய காரணம்.

பள்ளியில் விட்டு வைக்க முடியாது! அப்படியானால்?

பூட்டிய வீட்டைத் தானே திறந்து, தனிமையில் இருக்க வைக்கலாம். நண்பரின் வீட்டுக்கு சென்று விளையாடு என்று சொல்லிவிடலாம்.

நம்ம வீடுதானே? தெரிந்த தோழர்கள்தானே? அக்கம்பக்கத்திலும் ஆதுரமானவர்கள்தானே! என்ன ஆபத்து வந்துவிட முடியும்?

பத்மா அர்விந்த்தை சந்தித்தபோது சொன்ன நியு ஜெர்சியில் சம்பவம் நினைவிற்கு வந்தது.

பதின்ம வயதை எட்டிப் பார்க்கும் பொறுப்புள்ள பையன். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் பணத்தின் மதிப்பை அறிந்தவன். கூடப் படிக்கும் விடலை வகுப்பினர், ‘அந்த சைட்டுக்கு போய் காட்ட முடியுமா?’ என்று மிரட்டி உருட்டும் dareகளுக்கு ஈடுகொடுக்காமல், அமைதியாக புன்சிரிப்போடு ஒதுங்கும் பக்குவம் வாய்த்தவன்.

இப்படிப்பட்டவன் இப்போது சிறையில் இருக்கிறான். எந்தக் கைதியிடம் இருந்து எவ்வித கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றானோ!

ஏன் தண்டிக்கப்பட்டான்? எப்படி மாட்டிக் கொண்டான்? என்ன குற்றம் புரிந்தான்?

அவனுடைய பக்கத்துவீட்டுக்காரன் வலையகம் மூலம் கமிஷன் பார்த்து சம்பாதிப்பவன். தன்னுடைய போட்டியாளர்களின் கூகிள் விளம்பரங்களை முடக்கும் விதமாகவும், அவர்களின் வலையகங்களை DDoS போன்ற கொந்தர் நுட்பங்களில் செயலிழக்கவும் இவனை சூட்சுமமாக பயன்படுத்தி இருக்கிறான்.

அறியாத வயசு. கூடவே, ‘நீ இவ்வாறு செய்தால் உனக்கு இந்த குட்டிப் பரிசு! இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ!’ என்றெல்லாம் சன்மானங்களும் அளித்திருக்கிறான்.

தனிமையில் விடப்பட்ட மகனும், புதிய காலணிக்கு ஆசைப்பட்டு, அவன் சொன்ன உரல்களை விடாமல் சுட்டித் தள்ள, காவலரினால் விசாரிக்கப்பட்டு, அட்டர்னி ஜெனரலால் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூரியினால் கடுங்காவலில் விழுந்துவிட்டான்.

இப்போது எம்.ஐ.டி., ஹார்வார்டு கனவு போச்சு; வாலிபம் போயே போச்சு.

சில கேள்விகள்:

அ) பதின்ம வயதினர் செய்யும் குற்றங்களுக்கு, பெரியவர்களுக்கான நீதி பொருந்துமா? அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா? எந்த மீறல், எவ்விதம் என்று பகுப்பது?

ஆ) தாயும் தந்தையும் வேலைக்கு சென்றால்தான் ப்ரைவேட் பள்ளிக்கூடம், விசாலமான வீடு, ப்ளே-ஸ்டேசன் எல்லாம் சாத்தியம். ஒருவர் மட்டும் சம்பாதித்தால் கல்லூரிக்கு எப்படி பணங்கட்டுவது?

இ) தெருவிளக்கில் படித்து நீதிபதியானது, இந்தியாவில் தமிழ் மீடியத்தில் இருந்து அமெரிக்கா வந்தது என்பது போன்ற உதாரணங்கள், வருடத்திற்கு நாற்பதாயிரம் கோரும் தனியார் வாசகசாலையில் இல்லாமல், சாதாரண அமெரிக்க அரசுப் பள்ளிக்கு செல்வோருக்கும் பொருந்துமா?

ஈ) பசங்களுக்கு Bullying, பெண்களுக்கு barbie doll இலக்கணங்கள், இருபாலாருக்கும் dare செய்து பலான விஷயங்கள் செய்யவைப்பது போன்ற சூழலில் நான் கடைத்தேறிவிட்டேன். என் மக்கள்?

உ) குழந்தைகளின் கணினி பயன்பாட்டையும், தொலைக்காட்சி பார்த்தல்களையும் எவ்வளவு தூரம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்? எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும்? எது அத்துமீறி தணிக்கை என்று வரையறுப்பது?

தொடர்புள்ள சமீபத்திய பதிவுகள், செய்திக் கட்டுரைகள்:

1. The Walk-to-School Fight – NYTimes.com

2. Child protection: safeguarding without safeguards | Comment is free | The Guardian: Taking tough action that purports to protect children has long been thought a political trump card

3. Editorial – 12 and in Prison – NYTimes.com: “According to the study, every state allows juveniles to be tried as adults, and more than 20 states permit preadolescent children as young as 7 to be tried in adult courts.”

4. Parenting or Spying: Who’s Watching The Kids? — The Responsibility Project

5. Good Parenting or Bad Spying? — The Responsibility Project

6. Calling the Cops on Your Kids: Parenting vs. Policing — The Responsibility Project

→ 6 மறுமொழிகள்பகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Mylapore Kapaliswarar Temple Golu: Navarathri Celebrations

செப்டம்பர் 28, 2009 · 2 மறுமொழிகள்

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: Tamil Blog
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,